Thursday 27 December 2012

காதல்!.காதல்!.காதல்! ......



பள்ளிபடிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடங்குவார்கள் ..கூடவே காதலையும் தொடங்குவார்கள் 
கல்லூரியில்  படித்தால் ...ஒருவன் கட்டாயம் காதல் செய்வான் என்பது  ..இளசுகளின் மனபக்குவம் ..நானும் இளசு அதனால்தான் .இப்படி உறுதியாக கூறுகின்றேன்.....

காதலிப்பதும் திடீரென மனம் மாறுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சகஜமான விஷயமாக மாறிவிட்டது. அதற்கு பல காரணங்கள். பழக ஆரம்பிக்கும்போது தெரியாத பல விஷயங்கள் பிறகு தெரிய வரும். அதனால் காதலை தொடர மனமில்லாமல் கட் பண்ண நினைப்பார்கள். இருவரும் விரும்பி காதலித்த பிறகு, ஒருவர் மட்டும் விலக நினைத்தால் மற்றொருவர் விடமாட்டார். அப்போதுதான் பிரச்னை ஆரம்பமாகும். வெட்டு, குத்து, ஆசிட் வீச்சு என பயங்கரத்தில் முடியும். அப்படித்தான் காதலித்த பெண், திடீரென பேச மறுத்ததால் தலையை தனியாக வெட்டி எடுத்து கொன்று விட்டார் காதலன். நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி. மனைவி மாடத்தி, மகள் பிரேமா. பி.காம். மாணவி. பக்கத்து வீட்டு வாலிபர் மணிகண்டன், ராணுவ வீரர். இருவரும் 3 ஆண்டாக காதலித்தனர். 

6 மாதம் முன் ஊருக்கு மணிகண்டன் வந்தார். அப்போது காதல் விவகாரம் பிரேமாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. ‘மணிகண்டனுக்கு குடிப்பழக்கம், கெட்டப் பழக்கங்கள் உண்டு. அவனிடம் பழகாதே’ என்று மகளுக்கு அறிவுரை கூறினர். மனம் மாறிய பிரேமா, மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்தார். இது மணிகண்டனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காதலியை பார்ப்பதற்காக ஒருவாரத்திற்கு முன் ஊருக்கு வந்தார் மணிகண்டன்.


 என்னை காதலிக்காவிட்டால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.  பயந்து போன குடும்பத்தினர், தாத்தா வீட்டுக்கு பிரேமாவை அனுப்பி வைத்தனர். மணிகண்டன் ஜம்முவுக்கு சென்று விட்டதாக தகவல் வந்ததையடுத்து  ஊர் திரும்பினார் பிரேமா. இது தெரிந்து கையில் அரிவாளுடன் வெறிபிடித்தவர் போல் மணிகண்டன் வந்தார். 

பிரேமாவை சரமாரியாக வெட்டினார். ஆட்டை அறுப்பது போல தலையை அறுத்தார். பின்னர் துண்டித்த தலையையும், அரிவாளையும் அருகில் உள்ள முள்புதரில் வீசிவிட்டு ஓடிவிட்டார். தலைமறைவாகிவிட்ட மணிகண்டனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 


காதலித்த பெண்ணை காயப்படுத்தவே மனம் வரக் கூடாது காதலனுக்கு. ஆனால் தலையையே தனியாக வெட்டி எடுத்திருக்கிறார். இது என்ன காதல்? ..உண்மையாக காதலித்த பெண் ..நமக்கு கிடைக்கவில்லை என்றால் ..அவள் எங்கு இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என்னும் பழக்கம் உடையவன்தான் உண்மையான காதலன் ..இது காதலே கிடையாது ..ஒருவகை மன நோய் ..இந்த நோயை வேரமாதிரியாகவும் நான் கூறுவேன் ..இந்த பதிப்பை என் குடுபத்தினர் படிப்பார்கள் என்பதனால்..நாகரிகமாக கூறுகின்றேன் ..இது காதல் கிடையாது ஒருவகை மனநோய்..............காதல் என்ற போர்வையில் போத்திகொள்ளும் ...இளசுகளே ...நானும் இளசுதான் . உங்களுக்கு கூறும் அறிவுரை ..காதல் செய்வது தவறில்லை ..கல்யாணத்துக்கு பிறகு .................என்பதை புரிந்தால் சரி ......

நன்றி அடுத்த பதிப்புடன்.உங்கள் இளம்நண்பன் >>>>ரினாஸ்<<<<    



2 comments:

  1. //காதல் செய்வது தவறில்லை ..கல்யாணத்துக்கு பிறகு//.
    யாரைன்னு சொல்லவே இல்ல. ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. சகோ நான் பொதுவா அனைவருக்கும் கூறிய அறிவுரை சகோ ..............ஹ ஹ ஹ ஹ

      Delete