Sunday 19 March 2017

கலப்படம் இல்லாமல் பொய் இல்லாமல் உறவுகளுடன் எப்புடி பழகுவது ?

கலப்படம் இல்லாமல் பொய் இல்லாமல் உறவுகளுடன் எப்புடி பழகுவது ?
என்பதுதான் நம் அனைவரின் மனதிலும் ஏற்படக்கூடிய சந்தேகம் 
நாம் நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களைக் கேக்கிறோம் படிக்கிறோம் ஆனால் நம் வாழ்வில் நடைமுறை படுத்துகிறோமா? என்று பார்த்தால் அதுதான் கிடையாது அப்படித்தானே ? 
சரி நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள்  தாய் தந்தை மற்றும் மற்ற உறவுகளுடன் எப்புடி அன்பாக இஸ்லாத்தின் அடிப்படையில்  பழக வேண்டும் என்பதை கூறியிருக்கிறார் என்பதை சுருக்கமாக பார்ப்போம்  





முதலில் தாய் 
தாயின் காலடியில் சொர்க்கம் - நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான் தாயை முதியோர் இல்லத்தில் சேர்ப்பார் 

தந்தை
தந்தை திரிப்தியில் அல்லாஹ்வின் திரிப்தி உள்ளது - நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான்  தந்தையை எதிரியாக பார்ப்பார் 

சகோதர சகோதரிகள் 
தனக்கு விரும்பியதையே தன சகோதரனுக்கு விரும்பாதவரை எவர் ஒருவரும் ஈமான் கொள்ள முடியாது -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான்  சகோதர சகோதரிகளிடம் அந்நியமாக  இம்மையில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் 

கணவன் 
        மனைவியிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர் -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எவர் மறக்கிறாரோ அவர்கள்தான் இம்மையில் மனைவியியை அடிமை போல் நடத்துபவர்கள் 

மனைவி 
கணவனின் பொருத்தம் இல்லாமல் எந்த ஒரு பெண்ணும் சொர்க்கம் செல்ல முடியாது -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை எந்த பெண் மறக்கிறாரோ அவர்கள் தான் கணவனுக்கு இம்மையில் கட்டுப்பட்டு நடக்காமல் இருப்பவர்கள் 

உறவுகள் [ சொந்தங்கள் ]
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கம் செல்லமாட்டான் -நபிகள் நாயகம்
இந்த ஹதீஸை மறக்கும் மக்களும் சரி மறக்காத மக்களும் சரி இதில் தான் அதிகம் தவறு செய்து விடுகிறார்கள் 
பெரும்பாலான மக்கள் உறவை முறித்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் உறவுகளுடன் நெருங்கி பழகுவதே கிடையாது 

மக்கள்
எவரால் மனித இனத்துக்கு நன்மை ஏற்படுகின்றதோ அவரே மனிதரில் சிறந்தவர் - நபிகள் நாயகம்
மனிதர்கள் மீது அன்பு செலுத்துவதற்கு இந்த ஹதீஸ் நினைவில் இருந்தால் போதும் 

                                                                               நன்றி
  உங்கள் நண்பன்.  ரினாஸ் 
   mob no : 9944486627