Wednesday 19 November 2014

தொழுகையும் நம் ஆடையும்

[குறிப்பு] நான் பார்த்த சிறு சிறு விசயங்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன் இதில்  ஏதேனும் தவறு மற்றும் எழுத்து பிழை இருந்தால்  சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்..........

தொழுகையும் நம் ஆடையும்   



நாம் வித விதமான  புதுசாக அணியும் ஆடைகள்  அனைத்தும்  கல்யாணங்களுக்கும் சில பல விசேசங்களுக்கும் தான் .........
தொழுகையில் ஏனோ தானோன்னு. எது கண்ணுல படுதோ அதை போட்டுக்கிட்டு அவசரம் அவசரமாக   தொழுக போகிறோம் 



நாம் புதுசாக சுத்தமான ஆடைகளை அணிந்து நம் வீட்டின் கழிவறைக்கு செல்வோமா? இல்லை  

லுங்கியோ .. இல்ல ஏதேனும் நைட்.டிரஸ்ஸோ  அணிந்து தான் கழிவறைக்கு செல்கிறோம் 

நாம் பெரும்பாலும் வீட்டில்[இரவில் ] இருக்கும் பொழுது லுங்கியோ நைட் ட்ரசையோதான் அணிவோம்.
அப்படி இருக்கையில் பெரும்பாலான மக்கள் பஜ்ருடைய தொழுகைக்கு  வரும் பொழுது லுங்கி.நைட் டிரஸ் இந்த மாறி ஆடையை அணிந்து கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது 
நாம் எங்கே செல்கிறோம்  இறைவனை வணங்க .இறைவனிடம் பேச 
நம்முடைய இன்பம் துன்பம் அனைத்தையும் நம்மை படைத்த இறைவனிடம் உரையாட செல்கிறோம் . 

அப்படி இருக்கையில் நம்முடைய உடையில் நாம் கவனம் செலுத்த வேண்டாமா ? 
ஒரு ஐ/டி கம்பனிக்கு நாம் வேலைக்கு செல்கிறோம் . லுங்கி மற்றும் நைட்.டிரெஸ்ஸை அணிந்து தான் செல்வோமா ? இல்லை அப்படி சென்றால் அவன் நம்மை தொரத்தி விடுவான் இல்லையா  டிப் டாப்பாக தான்  செல்வோம் .
ஒரு மனிதனை சந்திக்க செல்லும் போதே நாம். நம் உடையில் கவனம் செலுத்துகிறோம் அப்படி இருக்கையில் நம்மை படைத்த இறைவனை வணங்க செல்லும்  பொழுது நாம் ஏன் உடையில் கவனம் செலுத்துவது இல்லை ?
அனைவரும் சிந்திக்க வேண்டும் 
ஆடை தூய்மை பற்றி அல்லாஹ் கூறுவதை கேளுங்கள் 

அல்லாஹ் கூறுகிறான் 

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக

அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக... திருக்குர்ஆன் 74:4-5

தூய்மை இஸ்லாத்தின் ஒரு பகுதி .. நபிமொழி 

இதனால் நாம்  கடனை வாங்கி புத்தாடை அணியவேண்டும் என்பது கிடையாது தொழுகைக்கு வரும் பொழுது நம்மிடத்தில் இருப்பதில் தூய்மையான ஆடையை அணிந்து வந்தாலே போதுமானது 
முக்கியமாக பஜ்ருடைய தொழுகையில் நாம் லுங்கி .நைட்.டிரஸ் போடுவதை தவிர்த்து கொள்வோம் அனைவரும் தூங்கி எழுந்ததும்  பஜ்ருடைய தொழுகைக்கு செல்லும் பொழுது ..........அப்படியே பல் துலக்கி விட்டு அசுத்தமான ஆடையுடன் . பள்ளிக்கு செல்வதை பார்க்க முடிகிறது இன்ஷா அல்லாஹ் இனி நாம் தொழுகையின் போது நாம் தூய்மையான ஆடைகளை அணிந்து  கொண்டு தொழுவோமாக................
                        
                          ஜஸகல்லாஹுஹைர்                                         


இதில்  ஏதேனும் தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் ... பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.