Thursday 14 April 2016

என் பார்வையில் தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி

1]எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து மது ஒழிப்பிற்காக.போராட்டம் விவசாய மக்களுக்காக போராட்டம் .தமிழ் மக்களுக்காக போராட்டம் என்று இன்னும் எத்துணையோ விசியங்களுக்காக  குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றவர் வயது எழுபதை தாண்டி விட்டது .- வைகோ

2]உடல் நிலை சரியில்லை தொண்டை மற்றும் முதுகில்  ஆபரேசன் செய்து இருப்பதால் பேச்சிலும் நடையிலும் தள்ளாட்டம் தவிர .மதுவினால்  ஏற்பட்ட தள்ளாட்டம் கிடையாது இவரின் பேச்சை கிண்டல் செய்யும் மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் இவரின் பேச்சால் எத்துணையோ படங்கள் வெள்ளிவிழா கண்டவை .ரமணா திரைப்படத்தில் க்ளைமேக்ஸ்  காட்சியில் மாணவர்களை பார்த்து இவர் மூச்சுவிடாமல் பேசும் காட்சியை ரசிக்காதவர்களே இல்லை இன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சில் தடுமாற்றம்  150-க்கும் மேற்பட்ட  படங்களில்   நடித்து இருக்கிறார் டூப் போடாமல் எத்துணையோ சண்டை காட்சிகளை அசால்ட்டாக செய்தவர் . சண்டை காட்சிகளுக்கு பெயர் போனவர் திரையுலகில்  நிறைய நலிந்த கலைஞர்களை தூக்கி விட்டவர் - விஜயகாந்த் 

3]இருளில் இருக்கும் தலித் மக்களின்வாழ்வில் வெளிச்சம் கொண்டு வர உழைப்பவர்.. நூறு பேர் இருக்கும் இடத்தில் இவர் பெயர் கூறினால் அதில் ஐம்பது பேர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் . அரசியலிலும் சரி மக்களிலும் சரி இவருகென்று தனி மரியாதை இருக்கிறது -திருமாவளவன் 


4]முதலாளித்துவத்தை எதிர்க்கும் - கம்யூனிஸ்டுகள் 


இந்த கூட்டணிக்கு ஏன் நாம் ஒரு வாய்ப்பை குடுக்க கூடாது ...
தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி



சிந்திப்பீர் செயல்படுவீர் 
நன்றி  உங்கள் நண்பன் ரினாஸ்  







Saturday 6 February 2016

விசாரணை படம் குட்டி விமர்சனம்





நடிகர் : அட்டகத்தி தினேஷ் . சமுத்திரகனி .மற்றும் பலர் 

இயக்கம் : வெற்றி மாறன் 

இசை : ஜி வி பிரகாஸ் 

உண்மை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் .: விசாரணை 

குட்டி விமர்சனம் :

ஆந்திராவில் வேலை பார்க்கும் அப்பாவி மூன்று தமிழ் நாட்டு இளைஞர்களை ஆந்திர போலீசார் கைது செய்து ..
அடித்து கொடுமை படுத்தி அவர்களை செய்யாத குற்றத்தை செய்ததாக 
ஒப்புகொள்ள சொல்கிறார்கள் 

இடைவேளை வரை அவர்களை அடித்து துவைக்கிறார்கள்.....
திரையில் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியும் .திரை அரங்கில் இருக்கும் மக்களை பயம்புடுத்துகிறது ...

தமிழ்நாட்டு போலீசான சமுத்திரகனி அந்த இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டுக்கு அழைத்து செல்கிறார் ....
தமிழ்நாடு  போலிஷ் நல்லவன் .வல்லவன் என்று புகழ் பாடும் அட்டகத்தி தினேஷ் மற்றும் இளைஞர்கள் 
க்ளைமாக்ஸ்ல் அந்த ஆந்திர போலிஷ்காரகளே பரவாலை என்று நினைக்கும் அளவுக்கு காட்சி அமைத்து இருப்பது ..அருமை ......
மொத்தத்தில் விசாரணை போலிஷ்காரர்களின் சுயரூபத்தை தோலுரித்து காட்டுகிறது....
இந்த படத்துக்கு என்னுடைய மதிப்பெண் 5/4
                                                நன்றி . நட்புடன் உங்கள் ரினாஸ் 


Sunday 3 January 2016

திக்கு வாய் குணமாக



திக்கு வாய் என்பது ஒரு வார்த்தையை கூறமுடியாமல் தட்டு  தடுமாறி அந்த வார்த்தையை கூற முடியாமல் திணறுவதே திக்கு வாய் என்று கூற படுகிறது. அல்லவா
சரி திக்கு வாயை குணபடுத்துவது எப்புடி? என்பதை பார்ப்போம்
எனக்கு திக்குவாய் இருந்தது ஆனால் இப்பொழுது நான் திக்கி திக்கி பேசுவது இல்லை எனக்கு எப்புடி திக்குவாய் குணமானது என்பதை உங்களுக்கு கூறுகிறேன் திக்குவாய் உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.........
நான் ஒரு திக்குவாய்
திக்கு வாய் போக்க மருந்துகள் என்று கூறி என் பாட்டி  தந்த சிகிச்சை
[1]  காடை கோழி  முட்டையை பச்சையாக குடிப்பது [ காசு விரையம் ஆனதுதான் மிச்சம்]
[2]  பொடி பொடி கூழாங்கற்களை  வாயில் போட்டு பேசுவது [ நேரம் வீணானது தான் மிச்சம்  ]
]3]  தனி அறையில் நியூஸ் பேப்பரை சத்தமாக வாசிப்பது [தொண்டை வலி வந்ததுதான் மிச்சம் ]
[4]  டங் கிளினர் வைத்து அடிகடி நாக்கை சுத்தம் செய்வது  [ஆனால் நாக்கு புண்ணானதுதான் மிச்சம் ]  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனால் எதுவுமே யூஸ் ஆகலை
இதனால் எல்லோரும் என்னை கிண்டல் அடித்தார்கள் அந்த கிண்டலே எனக்கு வெறியாக மாறியது எனக்குள் உள்ள திக்குவாய் இப்போது காணாமல் போய்விட்டது .... அது எப்புடி? தானே கேக்குறிங்க  இதோ சொல்றேன் பாருங்க

திக்கு வாய் வர காரணம் நம் ஆள் மனதில் இருக்கும் ஒரு வித பயம் தான் காரணம்..என்பதை உணர்ந்தேன் அந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் இருந்து போக்கினேன்
எனக்கு சில சில எழுத்துக்கள் உச்சரிக்க வராது
உதாரணம்: கு .பூ .து .கே
குரங்கு என்று கூற திக்குவேன் இதை மாற்ற நினைத்தேன்
குரங்கு என்ற கூற சந்தர்ப்பம்  வந்தால் ஆங்கில வார்த்தையை உபயோகம் செய்வேன் அதாவது மங்க்கி. என்று கூறி வந்தேன் ...
பஸ்சில் பயணம் செய்யும் பொழுது .. பூமார்கட்  போக டிக்கெட் கேப்பேன் ஆனால் என் வாய் திக்கும்
உடனே பூமார்கட் என்று கேட்பதற்கு பதில் ஆங்கில வார்த்தையான FLOWER மார்க்கெட் என்று மாற்றி  கேட்ப்பேன்
இந்த மாறி நமக்கு எந்தெந்த வார்த்தைகள் திக்குமோ அதை கூறுவதற்கு பதிலாக ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஏதாவது மொழிகளில் அந்த வார்த்தைகளை கூறி பழகினோம் என்றால் நால் பட நால் பட நமக்கு திக்குவாய் என்பதே மறந்து போகும்
எனக்கு அப்படித்தான் சரியானது
மற்றும் இறைவனிடம் அழுது துவா[பிராத்தனை] கேளுங்கள்

மூஸா நபி அவர்களுக்கு திக்கு வாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கிவை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. என்று சொன்னார்கள்.. திருக்குர்ஆன் 20:27

இன்ஷா அல்லாஹ் நாமும் இது போல் துவா [பிராத்தனை ]செய்து மற்றும் நமது பேச்சின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றுவோம் என்றால் கண்டிப்பாக திக்குவாய் என்பதே இல்லாமல்  நல்ல மாற்றத்தை காண முடியும்
                                                                               நன்றி
                                                                                           நட்புடன் உங்கள் ரினாஸ்