Wednesday 30 January 2013

படம் பார்த்து கதை சொல் >>>>>



படம் பார்த்து கதை சொன்னதுனால் தான் இவ்வளவு பிரச்சனை ....

முதலில் விஸ்வரூபம் படம் கமலின் விஸ்வரூபமாகா இருந்தது பின்பு 
அது திரைஅரங்கு உரிமையாளர்களின் விஸ்வரூபமாகா மாறியது பின்பு 
அது இஸ்லாமிய மக்களின் விஸ்வரூபமாகா இல்லை இல்லை சில இஸ்லாமிய 
இயங்ககளின் விஸ்வரூபமாகா .மாறியது ..ஆனால் இப்ப 
இது .. தமிழக அரசின்   விஸ்வரூபமாகா உருவெடுத்து இருக்கிறது ................


ஆம் இப்ப விஸ்வரூபதுக்கும் ..இஸ்லாமிய அமைப்புகளுக்கும் பிரச்சனை இல்லை ....தமிழக அரசுக்கும் .கமலுக்கும் உள்ள பிரச்சனை 

நேற்று எந்த டீ வீ  சேனல்களிலும் ..பிளாஸ் நீவ்ஸ் [flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......

என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 

இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....

அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ...

அந்த மாரிதான் நடக்க போகுது போல் தெரிகிறது..நம்ம தமிழகத்திலும் அல்லாஹ் தான் காப்பத்தனும் ....கமலுக்கும் .தமிழக அரசுக்கும் உள்ள பகையால் ..இடையே அப்பாவி முஸ்லிம் மக்கள்  மாட்டி கொண்டு முழிக்கிறார்கள் ..முஸ்லிம்களின்  பெயரை சொல்லி தமிழக அரசு காய் நகர்த்தி கொண்டு வருகிறது .......நம் முஸ்லிம் இயங்ககளே படத்தை வெளியிட சொன்னாலும் ..நம் தமிழக அரசு வெளியிடாது போல் தெரிகிறது ..அப்படியே என்னதான் பகை கமலின் மீது நம் தமிழக அரசுக்கு ???

 கடுமையாக இந்தப் படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணம்?  
அதிமுகவுக்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் இந்த படத்தை அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும்,  ஆனால் திரைப்படத்தை 100 கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்திருப்பதால் திரைப்படத்தை குறைந்த விலைக்கு விற்க மறுத்துவிட்டு அதிக விலைக்கு வேறு ஒரு தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டதுதான் காரணம் என்றும் கூறூகிறார்கள்.
அதைப்போல மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது,   வேட்டி கட்டிய ஒரு தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று ப. சிதம்பரத்தை குறிப்பிட்டு பேசியதும் கோபத்திற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.  ஆனால், இந்த கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை....


அல்லாஹ்தான் காப்பத்தனும் ....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<< 






Saturday 26 January 2013

இஸ்லாம் வளர்கிறது >>>>>>>










நான் இதுக்கு முன்னாடி இரண்டு பதிப்புகள் போட்டேன் ஒன்று 


மற்றொன்று .


என்ற தலைப்பில்

இந்த இரண்டு பதிப்புகளுக்கும் எனக்கு நிறைய மாற்று கருத்து வந்தது..தனிப்பட்ட முறையில் முகநூலிலும் 

.என்னுடைய மின் அஞ்சலிலும்......

சரி பரவாலை ஒவ்வொருவரின் 

பார்வையும் மாறுபடும் அல்லவா

என்னுடைய பார்வையில் நான் போட்டதுக்கு எதிர்ப்பு ..அனைவரும் பார்வையும் ஒரேமாரி இருக்கும் பொழுது 

என்னுடைய பார்வை சற்று விலகும் பொழுது ..அனைவருக்கும் என்னுடைய பதிப்பு 

அந்நியமாகத்தான் தெரியும் 

அவ்வளவுதான் அப்படி அந்நியமாகா பார்க்கப்பட்ட பதிப்புதான் மேல 

குறிபிட்டுள்ள இரண்டு பதிப்புகள் சரி இந்த பிரச்சனைகளின் மூலம் நான் கண்ட சிறு சிறு 

நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள 

விரும்புகின்றேன்....


முதலில் inocence of Muslims என்ற குறும்படம் நபி[ஸல்] அவர்களை இழிவு படுத்தி எடுத்த படத்துக்கு உலகம் 

முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள் எதிர்த்தோம் ....

பின்பு துப்பாக்கி திரைபடத்தில் வந்த சர்ச்சை குரிய காட்சியை அனைத்தும் இஸ்லாமிய மக்களும் எதிர்த்தனர் 


இப்ப விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை இழுவு படுத்தும் காட்சிகள் இருப்பதாக ..பிரச்சனை 

எழுந்து வருவது அனைவருக்கும் 

தெரிந்ததே.......

இந்த மூன்று பிரச்சனைகளும் மூலமாகா .....இஸ்லாம் என்ன வென்றே தெரியாத மக்களுக்கும் ...இஸ்லாம் என்றால் என்ன ? என்பதை தெரிய ஆவல் எழுந்துள்ளது ....என்பதை நான் தெரிந்து கொண்டேன் ..

ஆமாம் இஸ்லாமியர்கள்   inocence of Muslims  என்ற திரைப்படத்தை எதிர்த்தனர் அல்லவா ...அதை பார்த்த மாற்று மத நண்பர்கள் என்னிடம் [எனக்கு அதிக அளவு மாற்று மத நண்பர்களே உள்ளனர் ] அதில் ஒருவர் என்னிடம் கேட்டார் மாப்ள யாருடா இந்த நபி[ஸல்] இவருக்காக  ஏன் நீங்கள் இப்படி போராட்டம் செய்கீறீர்கள்  ..அப்படி இவர் என்ன  பணினார் உங்களுக்கு ???? 

தாவா பண்ணுவதற்கு ஒரு அறிய வாய்ப்பு அப்பவே வந்தது ..அதையும் உபயோகம் செய்தேன் நீங்களும் செய்து இருபிங்கள் என்று நினைகிறேன் ??? இதை நான் அப்பவே  என் முகநூலிலே கூறி இருந்தேன்..

சரி அடுத்தது துப்பாக்கி படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிக்கும் 
இன்று நடக்கும் விஸ்வரூபதுக்கும் ..இந்த கேள்வி மக்களிடம் எல  தொடங்கி உள்ளது..ஏன் இவர்கள் ஆவூனா போராட்டாம் பன்றார்கள் ?

இவர்கள் சொல்வதும் ஒரு வகையில் நியாமாகத்தானே தெரிகிறது ..ஏன் தீவிரவாதி? என்றால்  அது இஸ்லாமியர்கள் தானா ? ஏன் இந்து மதத்தில் தீவிரவாதி இல்லையா ? கிருஸ்துவ மதம் ? மற்றும் பிற மதங்களில் தீவிரவாதிகளே இல்லையா ?என்று கேட்டனர் 

முஸ்லிம் மக்களை அநியாயமாக கொன்ற இந்து தீவிரவாதத்தை பற்றி இந்து நண்பர்கள்  என்னிடம் கூறி ....இந்து தீவிரவாதத்தை பற்றி ஏன் படம் எடுக்க எந்த நடிகரும் இயக்குனரும் முன் வர மாட்டிங்குறாங்க ..என்று அவர் அவர் ஆதங்கத்தை கூறி வருகிறார்கள் ...இது நான் என் நண்பர்களிடம் இருந்து ..நேரடியாகா பார்த்தது 

என்னுடைய நண்பர்களுக்கும்.என்னால் புரிய வைக்க முடிந்தது .தீவிரவாதி என்றால் அது முஸ்லிம்கள் மட்டும் இல்லை ..பிற மதங்களிலும் இருக்கிறார்கள் ...முஸ்லிம்கள் மட்டும் விளம்பரம் படுத்த படுகிறார்கள் தீவிரவாதியாகா என்று ..நான் இணையத்தளத்தில் இருந்து சில ஆதாரங்களை எடுத்து  என் நண்பருக்கு காண்பித்தேன்....

அதை கண்ட நண்பர்கள் இவ்வளவு கொடுமை படுத்த பட்டுருகிரார்களா ? முஸ்லிம் மக்கள் ?[குஜராத் சம்பவத்தை பற்றி காண்பித்தேன் ] பாவம் முஸ்லிம் மக்கள் . என்று நமக்காக அனுதாபம் படுகிறார்கள் என் நண்பர்கள் 

இதில் இருந்து நமக்கு தாவ பண்ணுவதற்கும் ..முஸ்லிம்கள் மட்டுதான் தீவிரவாதி கிடையாது மாற்று மதத்திலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று உண்மையை ...தெரியாத மக்களுக்கும் எடுத்து கூற ஒரு அறிய வாய்ப்பு தான் இது ..   inocence of Muslims    மற்றும் விஸ்வரூபம் ..........

இதன் மூலம் இஸ்லாத்தின் வழியில் அழைக்க நல்ல ஒரு சந்தர்ப்பம் மற்றும் மறைக்கப்பட்ட இந்து தீவிரவாதத்தை தெளிவாகா..கூற அறிய ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது ...இந்த நிகழ்வுகளின் மூலம் எனது பார்வையில் அல்லாஹ்வின் உதவியால்  இஸ்லாம் வேகமாகா வளர தொடங்கி உள்ளது ....

அனைவரும் இந்த நல்லதொரு சந்தர்பத்தை பயன்படுத்துவோமாகா ..நன்மையை ஏவி தீமையை தடுப்போமாகா .....இதன்குண்டானா கூலியை அல்லாஹ் நமக்கு மறுமையில் தருவான் ..அனைவரும் இந்த சந்தர்பத்தை நழுவ விடாதீர்கள் .....  

யாராவது நேர்வழியின் பக்கம் அழைக்கும் போது அதனை(நேர்வழியை) 

பின்பற்றி நடப்பவருக்கு கிடைக்கக் கூடிய கூலியைப் போன்றே அவருக்கும் கிடைக்கும்.அதனைப் 

பின்பற்றுபவருக்கு அதனால் எந்தக் குறைவும் ஏற்படாது என்று .நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(முஸ்லிம் : 4831)

                                              அல்லாஹ் கூறுகிறான் 
நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும்.அவர்களே வெற்றி பெற்றோர்.(3:104)
அல்லாஹ் காட்டித் தந்த நல்வழியின் பக்கம் யார் அழைக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் அதுவல்லாததின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள் தோற்றுப் போனவர்கள் என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் தெளிவாக அறிய முடியும்....

அல்லாஹ்வை நோக்கி(மக்களை)அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லை கூறுபவன் யார்?(41:33)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைப்பவரை விட சிறந்தவர் யாரும் இல்லை என்பதை இறைவன் தெளிவாக சொல்வதுடன் இந்தப் பணி மிகத் தூய்மையான பணி என்பதையும் நமக்கு தெளிவு படுத்துகிறான்..................

நன்றி நாம் அனைவரும் நன்மையை ஏவி தீமையை தடுப்போம்மாக 


Thursday 24 January 2013

ரசிகர்களும் விஸ்வரூபமும் >>>>>>








கடைசி வரைக்கும் ஒரு புறம் ரசிகர்களின் ஆர்பாட்டம் ..
கடைசி வரைக்கும் இஸ்லாமியர்களின் ஆர்ப்பாட்டம் 
கடைசி வரைக்கும் ...மக்களின் மனோ நிலை ..படம் வருமா வராதா ? தடை நீடிக்குமா நீடிக்காத ?

இஸ்லாமியர்களின் நடுவே விசமாகா மாறியது இந்த விஸ்வரூபம்.....விட மாட்டோம் விட மாட்டோம் 
படத்தை ஓட விட மாட்டோம் ..என்ற கோசம் ........
ஒரு தரப்பினர் கூறுகிறார்கள் முதலில் படம் வரட்டும் வந்த பின்பு மக்களின் மனோ நிலையை வைத்து படத்துக்கு தடை விதிக்கலாம் ..என்று கூறுகிறார்கள் ...
இன்னொரு தரப்பினர் படத்தில் இருக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை வெளியிடலாம் 
இன்னொரு தரப்பினர் படம் வெளியிடவே  கூடாது என்று தங்கள் தரப்பு நியாத்தை கூறுகிறார்கள் ..

சரி மாற்று மத நண்பர்கள் இத பற்றி என்ன கூறுகிறார்கள் என்றால் ...
.படம் வெள்ளி அன்று திரைக்கு வரும் என்று ரசிகர்கள் நாங்கள் முன்னதாகவே டிக்கட் எடுத்து தியேட்டர்களின் முன்பு கமலின் கட் அவுட் எல்லாம் அடித்து .ஒரு விழா மாறி கொண்டாட தயாராக உள்ளோம் ஆனால் கடைசி  நேரத்தில் சிக்கலில் போய் மாட்டி விட்டதே படம் ...

கமல் சிறு வயது முதல் கலைத்துறையில் பணியாற்றி வருபவர் ...எல்லா நடிகர்களுக்கும் சீனியரும் கூட எல்லா நடிகர்களுக்கும் ..பிரச்சனை வரும் பொழுது ..அதை தீர்த்து வைக்க கமல் முன்வருகிறார் .ஆனால் கமலுக்கு பிரச்சனை வரும் பொழுது ..எந்த நடிகரும் உதவ முன் வர மாட்டிங்கிரார்கள் ..ஏன் நெருங்கிய  நண்பர் ..ரஜினி அவரும் இதை பற்றி எந்த பேச்சும் பேசாமல் மௌனமாகா இருக்கிறார்.. ...என்று மக்களும் அவர் அவர் தரப்பு நியாத்தை முன் வைக்குகீறார்கள்............

சரி விஸ்வரூபத்தை....நாம் தமிழர் கட்சி தலைவரும் ..நடிகருமானா சீமான் என்ன சொல்கிறார் என்பதை ஒரு காணொளி மூலம் பார்ப்போம் ........




விஸ்வரூபம் படத்துக்கு ..28ம் தேதி வரை தடை

நடிகர் கமல் படம் மீதான தடையை எதிர்த்து, தணிக்கைக் குழு அனுமதி தந்த பிறகும் தடை விதிப்பது சட்ட விரோதம் என  சென்னை ஐகோர்ட்டில் இன்று (24.01.2013) நடிகர் கமலஹாசன் மனு தாக்கல் செய்தார். 
அவசர வழக்காக ஏற்று மனுவை விசாரிக்க நீதிபதி வெட்கட் ராமனிடம் கமல் முறையிட்டார். இதையடுத்து இன்று மாலை இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றது.

நீண்ட நேர விசாரணைக்கு பின்னர்,  விஸ்வரூபம் படத்திற்கு ஜனவரி 28ம் தேதி வரை தடைவிதித்து நீதிபது உத்தரவிட்டார்.  நீதிபதி வெங்கட்ராமன் 26ம் தேதி இப்படத்தை நேரில் பார்க்கவிருக்கிறார்.  அதன்பின்னர் இப்படத்தை வெளியிடுவதா? இல்லை தடை நீடித்து உத்தரவிடுவதா? என்று நீதிபதி உத்தரவிடுவார்....................

சில நாடுகளில் விஸ்வரூபம் ரிலிஸ் ஆகி ஓடி கொண்டு இருக்கிறது என்று என்னுடைய முகநூல் நண்பர் சொல்லி கேட்டேன் ..அப்ப தமிழ் ரசிகர்கள் திருட்டு வி சி டீ மூலமாதான் பாக்கணும் போல ..ஹ ஹ ஹ ..என்ன கொடுமை ....

நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<< 




Wednesday 23 January 2013

இது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல...






இன்று எங்கு பார்த்தாலும்..கமலின் விஸ்வரூபத்தின் படத்தை பற்றி தான் எங்கும் பேச்சு ...ஏன் என்றால் இதில் இஸ்லாமியர்களை ...இழிவு படுத்தும் காட்சிகள் படத்தில் இல்லை ...படமே இஸ்லாமியர்களை இழிவு படுத்திதான் எடுக்க பட்டு இருக்கின்றது என்று.... 21.01.2013  அன்று இஸ்லாமியர்களின் அமைப்பின் தலைவர்களுக்கு மட்டும் இந்த படம் காண்பிக்க பட்டது ...படம் பார்த்த தலைவர்கள் சொன்ன கருத்து தான் .....இது 

இந்த கருத்து வந்ததில் இருந்து பெரும் பரபரப்பு ..இந்த படத்தை திரையிட விடமாட்டோம் ..அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த படத்துக்கு எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர் ....

சில இளைனர்கள் வரும் வெள்ளி அன்று இந்த படம் ரிலீசாகும் தியேட்டர் முன்பு நின்று படத்தை ஓட விடமாட்டோம் 
எங்கள் உயிர் இருக்கும் வரையுளும் இந்த படத்தை ஓட விடமாட்டோம் ....என்று உறுதியாக தங்களின் எதிர்ப்பை கூறி கொண்டு வருகின்றனர் ........இது ஒரு பக்கம் நடக்க ..........


இந்த படத்துக்கு தியேட்டர்களில் முன்பதிவு வேகமாக தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டு வருகின்றது சில தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கு டிக்கட் இல்லை என்று செய்தி வருகின்றது .....சில தியேட்டர்களில் ரிலீசாகும் நாளுக்கு முன்தன நாளே ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ..என்ற உறுதியான செய்தியும் வளம் வருகின்றது ...


கமல் இந்த படத்தை தன்னுடைய சொந்த செலவில் [சூனியம்] அதிகபட்சமாக 100 கோடி மதிப்பில் எடுத்து இருக்கிறார் .
ஏற்கனவே இந்த படத்தை d t h ல் ஒளிபரப்பாகும் என்றார் ..பின்பு திரை அரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தின் பேரில் அது கை விட பட்டது ..பின்பு தியேட்டர்களில் ரிலீசாகும்  என்ற அறிவித்தார் ...இப்ப இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் ..என்ற செய்தி ......

ஆகா மொத்தத்தில் கமலுக்கு பைத்தியம் பிடிக்கும் என்று நினைகிறேன் ..........

சரி இதெல்லாம் இருக்கட்டும் என்னுடைய ஆதங்கம் என்ன வென்றால் ...இஸ்லாமிய இளைனர்கள் தியேட்டர் முன்பு போராட்டம் நடத்த போகிறார்கள் ..என்று அறிவித்தார்கள் ..அங்கே கமலின் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா ...ஆகா மொத்தத்தில் இது மதம் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் சரி .....

என்னுடைய கருத்து ...கமல் எல்லா இஸ்லாமியகளிடமும் பொது மன்னிப்பு கேட்டால் ..அனைவரும் அதை பெரும் மனதாக ஏற்று கொண்டு ...விலக வேண்டும் ..ஏன் என்றால் ஒருப்பா இரண்டுரூபாவா? ..100 கோடி போட்டு எடுத்து இருக்கிறார் மனுஷன் அவரும் போட்ட பணத்தை திருப்பி எடுக்கனும்ல .....

இது கமலுக்கு ஆதரவானா பதிப்பு அல்ல....

நம் ஒற்றுமைக்கானா பதிப்பு..... ..

அந்த படத்துக்கு நம்முடைய எதிர்ப்பை தொடர்ந்து தெரிவிப்போம் அதற்காக கமலை பொது மன்னிப்பு கேக்க வைப்போம் .....இதுதான் நல்ல வழி ...தியேட்டர்களின் முன்பு ஆர்ப்பாட்டம் இந்த மாறி செய்வது சரி அல்ல...

அல்லாஹ் கூறுகிறான் :

.(பயபக்தியுடையோர் ]கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்....3;134


கமல் செய்த பிழையை நாம் மன்னிப்போம் ....

ஆகமொத்தத்தில் இது யாருடைய விஸ்வரூபமாக இருக்கும் என்று தெரியவில்லை ....அல்லாஹ் தான் காப்பத்தனும் 

நன்றி உங்கள் >>>>ரினாஸ்<<<<





Monday 21 January 2013

சாதனை படைத்த தமிழகம் ......


முதலில் ஒரு சிறிய ஹதீஸ் ஒன்றை அனைவருக்கும் நினவுபடுத்துகிரேன்...இந்த ஹதீஸை ஏன் நான் உங்களுக்கு இப்ப கூறுகிறேன் என்பது உங்களுக்கு .கீழே படிக்க படிக்க புரியும் ....சரி ஹதீஸை பார்ப்போம் ..................

 'போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.....புகாரி ;242

நபி(ஸல்) அவர்கள் என்னையும் முஆத்(ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, '(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)'' என்று (அறிவுரை) கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான 'பித்உ'வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)'' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்'' என்று பதிலளித்தார்கள்....புகாரி ;4344

போதை தரும் அனைத்தும் விளக்கப்பட்டது என்று நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள் ..ஆனால் நம் தமிழகத்தில் ?????????????




தமிழகத்தில் தற்போது 6,823 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடைகளோடு இணைந்த 4,730 அனுமதிப்பெற்ற பார்கள் செயல்படுகிறது. 
காந்தி ஜெயந்தி, திருவள்ளூவர் தினம், மகாவீர் ஜெயந்தி, நபிகள் நாயகம் பிறந்தநாள், வள்ளலார் நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மே தினம் ஆகிய 8 நாட்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.  மற்றபடி சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்  என்று எதுவும் இல்லை. அதிக கட்டணம் வசூல், போலி மதுபான விற்பனையை தடுக்க கேரளமாநிலத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை மதுபான கடைகள் திறந்திருக்கும். தொழிலாளர் நல சட்டவிதிகளுக்கு உட்பட்டு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட எல்லா சலுகைகளும் வழங்கப்படுகிறது.  மதுபான கடை மேற்பார்வையாளருக்கு ரூ.22 ஆயிரமும், விற்பனையாளருக்கு ரூ. 17 ஆயிரமும் மாதஊதியமாக வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்யும் இவர்களுக்கு 8 மணிநேரம் போக, கூடுதலான 4 மணிநேரத்துக்கு,  ஒவ்வொரு மணிநேரத்துக்கும் மேற்பார்வையாளருக்கு ரூ.75ம், விற்பனையாளருக்கு ரூ.50 வழங்கப்படுகிறது.  

  தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமில்லாமல் அதன் வருவாயும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மூலம் அரசே சில்லறை விற்பனையில் ஈடுபட்டபோது 2003&04ம் ஆண்டில் 139.57 லட்சம் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் கிடைத்த வருவாய் 3639.93 கோடி ரூபாய். ஆனால் கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 536.35 லட்சம் பெட்டியாக அதிகரித்துள்ளது.  டாஸ்மாக் கடைகளின் ஆண்டு சராசரி வருமானம் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து தற்போது 18 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் நடப்பு ஆண்டு முடிவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள சூழலில் தமிழகத்தில் மதுபான விற்பனை மற்றும் கலால் வரியாக ரூ.23,500 கோடி வருமானத்துடன் முதலிடத்தை பெற்றுள்ளது.மதுவால் உருவாகும் சமூக பதற்றம்: குளோபல் சர்வே என்ற ஆய்வு மையம் நாடு முழுவதும் ‘குடிமகன்கள்‘ குறித்த ஆய்வை மேற்கொண்டது. இதில் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்திரபிரதேசத்தில் 21 சதவீதத்தினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் 16 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.


 மது குடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்களை மது குடிக்கும் நோய் பீடித்துள்ளது என்று தான் கருதவேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.அரசுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பூர்த்தி செய்வதில் டாஸ்மாக் கடைகள் முக்கிய பங்காற்றுகிறது என்பது நிதர்சனம். அதேசமயத்தில், மது குடிப்பதால் ஏற்படும் சமூக பதற்றமே அதை மூடவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதற்கான காரணம்.  சமீப ஆண்டுகளாக தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கடந்த ஆண்டில் மட்டும் 16 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 சதவீத விபத்துகளுக்கு ஏதாவது ஒரு வகையில் மது குடிப்பதே காரணமாக அமைந்துள்ளதாக அரசு தரப்பிலேயே ஒப்பு கொள்ளப்படுகிறது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துகின்றனர்.அதேபோல் தமிழகத்தில் ஏற்படும் 65 சதவீத கொலைகளுக்கும் மதுவே காரணமாக உள்ளது. 

டாஸ்மாக் பாரில் நண்பர்களாக நுழைந்து ஒரே டம்பளரில் மாறி, மாறி குடித்து கொண்டாடிய பலர், கடைக்கு வெளியில் எதிரிகளாக மாறுவதும், ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் சம்பவங்களையும் பார்க்க முடிகிறது. அதன் உச்சகட்டம் கொலையில் முடிகிறது. போதை தெளிந்த பின்னர் தான் நண்பனையே கொலை செய்த ஒரு துர்பாக்கியத்தையும் கொலையாளி அறிந்து கொள்ள முடிகிறது. மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல், தற்போது மது குடிப்பவனின் சராசரி வயது 13 என்பது தமிழகத்தில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய கேடு. 1980 வரை மது குடிப்பவனின் சராசரி வயது 28 ஆக இருந்தது. ஆனால் இப்போது பதின் பருவத்து இளைஞனும் காலை நேரத்திலேயே டாஸ்மாக் கடை திறக்கும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்கால தமிழ் சமூகத்திற்கு ஏற்படும் ஆபத்தை இப்போதே தடுக்க தவறி வருகிறோம் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கவலையாக உள்ளது.

*தமிழகம் , மற்ற தென் மாநிலங்களை பின்னுக்கு தள்ளி இதில் மட்டும் பல மடங்கு  முன்னேறிக் கொண்டிருக்கிறது. 
*கல்வியிலோ, மற்ற துறைகளிலோ இந்த  அளவுக்கு சாதனை இல்லை. ‘படி’மகன்கள் சாதிக்காததை, ‘குடி’மகன்கள் சாதித்துள்ளனர். 
*ஆம், டாஸ்மாக் மது விற்பனையில் சாதித்து விட்டது; மற்ற துறைகளில் முன்னேறி வரும் தென் மாநிலங்கள் பாவம், இதில் பின்னுக்கு போய் விட்டன. 
* தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் கடந்த  நவம்பர் 29, 2003ம் ஆண்டு முதல் மதுபான விற்பனையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுவதற்காக 35 ஆயிரம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இயற்கை மரணம், வேலை நீக்கம், தற்காலிக பணிநீக்கம் காரணமாக வேறு வேலை தேடி சென்றவர்கள் என 5 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இல்லை. நகரப்பகுதி கடைகளில் 4 பேர் வீதமும்,  கிராமப்புற கடைகளில் 2 பேர் வீதம் பணியாற்றி வருகின்றனர். 


தினசரி ஒரு குவார்ட்டர் தான்
5 ஆண்டில் ரூ.1.25லட்சம் காலி
 தமிழகத்தில் மதுவுக்கு அடிமையானவர்களில் 20 சதவீதத்தினர் தினமும் ஒரு குவார்ட்டரையாவது காலி செய்யும் குடிமகன்கள்.  தினசரி ஒரு குவார்ட்டர் அடிக்க 80 ரூபாய் செலவு என்றால் ஒரு ஆண்டில் 24 ஆயிரம் காலி. ஐந்து ஆண்டுகளில் சத்தமில்லாமல் 1.25 லட்ச ரூபாயை காலி செய்கின்றனர்.  இந்த ஐந்தாண்டில் அதை சேமித்தால், வீட்டுக்கு தேவையான பிரிட்ஜ், டிவி, ஏசி, மிக்சி, கிரைண்டர் என்று எல்லாம் வாங்கி விடலாமே.....எல்லாம் வாங்குறோமோ இல்லையோ ..உடல் ஆரோக்க்யத்தோடு நலமாய் வளமாய் வாழலாம் ......


நன்றி ..இந்த பதிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் .ஓட்டு போடுங்கள் கீழே ஓட்டு  லிங்க் தந்து இருக்கின்றேன் மற்றும் உங்களின் நண்பர்களோடும் இதை ஷேர் பண்ணுங்கள் ...இதில் ஏதேணும் மாற்று கருத்து இருந்தால் ...கீழே கமண்ட் இருக்கிறது ..தாரளமாக கமண்ட் பண்ணுங்கள்  ..உங்களின் வாக்குகள் ..வரவேட்கபடுகின்றது .....நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திக்கும் உங்கள் 
>>>>ரினாஸ்<<<<








ஓட்டு லிங்க் 









Tuesday 8 January 2013

இன்று ஒரு சம்பவம்...




இன்று நான் வேலை பார்க்கும் ஷாப்பிங் மாலில் கூட்டமே இல்லை 
காத்துவாங்கி கொண்டு இருந்தது .....
சரி எவ்வளவு  நேரம் தான்  இப்படி சும்மாவே இருப்பது.. பேசுவதற்கு  யாராவது   வருவாங்களான்னு பார்த்துக்கொண்டு  இருந்தேன் ...........



உடனே ஒருவன் வந்தான் ???

அட அட அட அட  செமா மகிழ்ச்சி ....நானும் அவரை  அன்பாக பார்த்து  வாங்க வாங்கன்னு வரவழைத்தேன் ..




வந்தவன் சற்று நல்ல டிப்டாப்பாக அதாவது மொழு மொழுன்னு சேவிங் பண்ணி    ஜென்டில் மேன் லுக்காக அதாவது மெடிக்கல் ரெப் வருவார்கள் அல்லவா  அந்த மாறி இருந்தான் .  

அப்பவே எனக்கு தெரிஞ்சது  ..இவன் எதையோ நம்ம கிட்ட மண்டையை கழுவி விற்க வந்து இருக்கிறான் போல என்று .அவன் மார்க்கெட்டிங் சேல்ஸ் மேன் ...

வந்தவனும் நானும் பேசியவை >>>>>>>>>





வந்தவன் :  குட் மார்னிங் சார் 

நான்; ம்ம்ம்ம்ம்ம் குட் மார்னிங் வாங்க வாங்க 

வந்தவன் ; சார் நான் மேக்ஸ் எல் ஐ சி இன்சூரன்ஸ் கம்பனில இருந்து வருகிறேன் 

நான் ; ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்டியா  வெரி குட  வாங்க வாங்க  

வந்தவன் ; நீங்கள் எதாவது இன்சூரன்ஸ்  போட்டு இருக்கீங்களா ?

நான் ; ம்ம்ம்ம்ம் போட்டு இருக்கேனே !!!!!!

வந்தவன் ; ம்ம் குட் சார் என்ன பிளான் ?

நான் ; என்னுடைய டூ வீலருக்கு இன்சூரன்ஸ் போட்டு இருக்கேன் ...

வந்தவன் : ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அது சரி ....சார் உங்களுக்கு எவ்வளவு வயது ஆகுது 

நான் ; எனக்கு இப்ப 24 வயது நடக்குது 

வந்தவன் ; சார் என்னிடம் இப்ப சூப்பர் பிளான் இருக்கிறது ?

நான் ; என்ன அது ????????? 

வந்தவன் ;  25 வயதுகுள்ள இளைஞர்களுக்கு  லைப் இன்சூரன்ஸ்  மாதம்  மாதம் வெறும் 720 ரூபாய் கட்டினால் போதும் ..வருடம் 8640 ரூபாய் ஆகும் ..நீங்கள் ஐந்து வருடம் கட்டினால் 43,200 ரூபாய் ..நீங்கள் கட்டுவீர்கள் ..ஆனால் நாங்களோ அந்த ஐந்து வருடத்தில் நீங்கள் கட்டின அந்த 43, 200 ரூபாய்க்கு கூடுதல் பணமாக 2,15000 ரூபாய் தருவோம் ..இது  இளைஞர்களுக்கு மட்டும் தான் இந்த பிளான் சார் . மிஸ் பண்ணிடாதிங்க சார் ........

நான் : அப்படியே வாயை பொழந்து அவனையே பாத்துட்டு இருந்தேன் வெறும்  43, 200 ரூபாய் கட்டினால் ,2,15000 ரூபாவா ? அங்கே எனக்கு வட்டி என்ற எண்ணம் ஏதும் வரவில்லை ..இந்த ஜென்டில் மேன் என் மனசை குழப்பி விட்டாரு ..அப்படியே சைத்தானும் வட்டியை வாங்க .என்னை ஊக்கபடுத்தி கொண்டே இருந்தது ......நான் மறுபடியும் வாயை பொலந்து  அவன்கிட்ட ..இவ்வளவுதான் ஆப்பரா வேற இன்னும் பூஸ்ட் தர மாறி ஏதாவது ஆப்பர் இருக்கா என்றேன் ....உடனே 

வந்தவன் ; பலத்த குரலில் ஓஹோ இருக்குதே சார் 

நான் : மகிழ்ச்சியோட ...இருக்கா அது என்ன ஆப்பர் ? என்ற சப்தத்துடன் 

வந்தவன் : நீங்கள் இன்று வெறும் 720 ரூபாய் குடுத்து இந்த பிளானை போட்டிங்கன்னா ?

நான் ;  மகிழ்ச்சியோடு ம்ம்ம்ம் போட்டுட்டேனா... ?

வந்தவன் ;உங்களுக்கு 25 வயது ஆகுவதற்குள் 

நான் ; ம்ம்ம்ம்ம்  எனக்கு 25 வயது ஆகுவதற்குள்  

வந்தவன் ; திடீர்ன்னு  ...நீங்கள் வண்டியில் போகும் பொழுது ஒரு லாரியோ பஸ்ஸோ உங்க மேல ஏறி நீங்க செத்துபோய்ட்டா   குறைந்த வயதில்  பெரும் விபத்துக்குள் ஆனதால். உங்கள்  குடும்பத்திற்கு. .3,50.000 கொடுக்கப்படும்  சார் ..எப்புடி  சூப்பர் ப்ளான் ..ஓகேவா? சார் .எப்புடி ஆப்பர் நல்ல சூப்பரா? பூஸ்ட் தர மாறி இருந்துச்சுல சார்  .....உங்க நேம் சொல்லுங்க இந்த பிளானை புக்  பண்றேன் 

நான் ; அப்படியே ஓடி போய்டு ....அல்லாஹு போர் அடிக்குது கொஞ்சம் மொக்க போடலான்னு நினைத்தால் ..கொய்யால லாரி ஏறிடும் பஸ்ஸு ஏரிடும்னா சொல்றா ....போயா வெளியே .......................






இன்சூரன்சில் வேலை பார்பவர்கள் இந்த பதிவை  படித்தீர்கள் என்றால் 

...அவர்களுக்கு என்னுடைய மெசேஜ் ..நீங்க யாரிடமோ இன்சூரன்ஸ் பற்றி  பேசும் பொழுது .நல்ல தெளிவாக நட்பு ரீதியாக ...உண்மையான பிளேனாக  இருந்தால் பேசுங்க அத விட்டுபுட்டு ..நீங்க செத்த பிறகு ..உங்களுக்கு அவ்வளவு  பணம் வரும் இவ்வளவு பணம் வரும் என்று சொல்லும் பொழுது .இன்சூரன்ஸ் போடலான்னு நினைக்குற நபர்கள் கூட போடவேண்டாம்னு தயங்குவார்கள் .ஏன் என்றால் இன்சூரன்ஸ்  போட்டு அடுத்த நாளிலே .நம்ம இறந்து   போய்டுவோமோ என்ற தயக்கம் ..ஒரு சிலருக்கு வரும் ....சோ இன்சூரன்ஸ் பற்றி பேசும் பொழுது மரணம் பற்றி பேசாமல் .சார் உங்களுக்கு அப்பறம் இந்த பணம் உங்க குடும்பத்துக்கு  வரும் சார் அப்படின்னு சொல்லி பாருங்க ?

                                                  நன்றி ...
                                            அன்புடன் உங்கள் ரினால் 








Saturday 5 January 2013

அடடே இதுவும் நல்லா இருக்கே !!!!!!


நம்முடைய தமிழக அரசு ..நம் தமிழ் மக்களின் வறுமையை ஒழிக்க .அவர்கள் சிறப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ...அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் மிதக்க.....சீரோடும் சிறப்போடும்.என்றும் நம் தமிழக அரசை மறக்காமல் இருக்க.....அதிரடி சலுகையாக ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ. 100 ரொக்கம்: குடுக்க முன்வந்துள்ளது......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இவர்களிடம் யாரு கேட்ட இந்த பணத்தை ..நார்மலாக ஒரு சராசரி மனிதன் அவனுடைய ஒருநாளின் அன்றாட செலவை போக்க ..குறைந்தது ரூபாய் 150 வது வேணும் .....இப்ப விக்குற விலைவாசிக்கு அதுவும் கொஞ்சம் கஷ்டம் தான் .....இவர்களிடம் யாரு கேட்ட 100 ருபாய் எல்லாம் ...

பொங்கல் சிறப்பு பரிசாக ..24 மணிநேரமும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப்படும் என்றால் ..அதுவல்லவா சிறப்பு பரிசு .அதை விட்டு புட்டு இதெல்லாம் .யாருக்கு வேணும் ..........இவர்கள் எல்லாம் நல்லா வருவாங்க ...

இவர்களின் இந்த அதிரடி சலுகையை கீழே படியுங்கள் .....




பொங்கலுக்கு சிறப்பு பரிசு… ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் ரூ. 100 ரொக்கம்: தமிழக அரசு அறிவிப்பு 

தமிழகத்தில் மழை பொய்த்ததாலும், வறட்சி நிலவுவதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.100ரூபாய் ரொக்கமும் 60ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொங்கல் பரிசும் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் சுமார் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 160 ரூபாய் மதிப்பிலான சிறப்புப் பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்று அளிக்கப்படும். இந்த தொகுப்பில், 20 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ பச்சரிசி, 40 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ சர்க்கரை மற்றும் பொங்கல் பண்டிகைக்காக இதர பொருட்கள் வாங்குவதற்காக 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும். இந்த தொகுப்பு அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். இதனால் அரசுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால், விவசாயிகளின் துயர் துடைக்க வழி வகுப்பதோடு, பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்"" என்று அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.......


இதை படித்ததும் நீங்கள் கூறுவது எனக்கு கேக்கிறது . இதயும்மாச்சு நம்ம தமிழக  அரசு ஒழுங்கா தரட்டுமே என்ற ஆதங்கம் தானே ..ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ,,,,,,,,,,,,,,,,,,,



இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் ..கீழ ஓட்டு பதிவு லிங்க் தந்து இருக்கின்றேன் ஓட்டு போடுங்கள் ..மாற்று கருத்து இருந்தால் .கீழே கமண்ட் இருக்கிறது அங்கே உங்களின் கருத்தை தெரிவியுங்கள் ..நன்றி இனி அடுத்த பதிப்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<< 


ஓட்டு பதிவு லிங்க் 






Friday 4 January 2013

ஹதீஸ்களின் தொகுப்பு



அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் ....நான் முகநூலில்  பார்த்த 

ஹதீஸ்கலை ..ஒன்று திரட்டி வைத்து இருந்தேன் ..சரி இவற்றை 

அனைவரும் பார்க்கும் வகையில் சேமித்து வைக்க  வேண்டும் என்ற 

எண்ணம் தோன்றியது .சரி உடனே அவற்றை ஒரு பதிப்பாக  

போடுவோம் 

என்ற 

எண்ணம்  

வந்தது...உடனே அவற்றை ஒரு பதிப்பாக  போட்டு விட்டேன் சிறந்த 

ஹதீஸ்களின் தொகுப்பு .இதோ............






   

வீட்டில் உருவப்படங்களை மாட்டுவது பற்றிய ஹதீஸ்


நான் ஒரு விருந்தை தயார் செய்து நபிகள் நாயகம் ஸல் அவர்களை அழைத்தேன்

அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படத்தைக் கண்ட போது திரும்பி சென்றுவிட்டார்கள் .

[அலி ரலி ,நஸயீ 5256]



புத்தாண்டை நிராகரிப்பீர்


'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். என்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?' என்று கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'வேறு யாரை?' என்று (திருப்பிக்) கேட்டார்கள்....... அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்....புகாரி அத்தியாயம் 96, எண் 7320


 அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகைஅதிகரிக்கப்பட்டது” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்........ அத்தியாயம் 8, எண் 350

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராத விதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா – பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான் என அனஸ்(ரலி) அறிவித்தார். இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது. அத்தியாயம் 80, எண் 6309

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்......... அத்தியாயம் 34, எண் 2059

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்............ அத்தியாயம் 50, எண் 2589

அனஸ்(ரலி) அறிவித்தார். (தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள். புகாரி அத்தியாயம் 10, எண் 603

“ஈமான் எழுபதுக்கும் மேற்பட்ட அல்லது அறுபதுக்கும் மேற்பட்ட கிளை(களை) உடையதாகும். அவற்றில் மிகச்சிறந்தது ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (எனும் கூற்றாகும்) அதில் மிகக்குறைந்தது, பாதையை விட்டும் இன்னல் தருவதை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்............... முஸ்லிம் : ஹதீஸ் எண் : 30

கண் பார்வையற்ற ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக என்னை பள்ளிக்கு அழைத்து வரும் உதவியாளர் யாரும் எனக்கில்லை (எனக் கூறி) தனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்கிறார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அனுமதி பெற்று அவர் திரும்பியபோது அவரை அழைத்து தொழுகையின் அழைப்பை (பாங்கை) செவியுறுகிறீரா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம்! என்றார். (அதற்கு) பதில் கூறுவீராக! (பள்ளியில் வந்து தொழுவீராக!) என்று கூறினர்...............முஸ்லிம். ஹதீஸ் எண் : 321

இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள். நிச்சயமாக யாருடைய ஆமீன் அமரர்களின் ஆமீனுக்கு ஒத்து இருக்கிறதோ அவரது பாவத்தில் முந்தியதை அவருக்காக மன்னிக்கப்படுகிறது என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆமீன்” எனக் கூறக்கூடியவர்களாக இருந்தனர் என இப்னு ஷிஹாப் கூறுகிறார். 
முஸ்லிம்.; ஹதீஸ் எண் : 284

 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'கால்நடைகள் அழிந்துவிட்டன் பாதைகள் துண்டிக்ப்பட்டுவிட்டன' என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தனர். அந்த ஜும்ஆவிலிருந்து மறு ஜூம்ஆவரை எங்களுக்கு மழை பொழிந்தது. பின்னர் அதே மனிதர் வந்து, 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள் எழுந்து 'இறைவா! மணற்குன்றுகளின் மீதும் மலைகளின் மீதும் ஓடைகளிலும் விளைநிலங்களிலும் (இம்மழையைத் திருப்புவாயாக!)' என்றுபிரார்த்தனை செய்தார்கள். உடைகளைக் கழுவுவது போல் அம்மழை மதீனாவைக் கழுவியது.................புகாரி ;1016.

 நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (ம்ரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள். புகாரி 1043. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, ‘சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்........... புகாரி அத்தியாயம் 4, எண் 134


ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு கூட்டத்தினர் எங்களிடம் இறைச்சியைக் கொண்டு வருகின்றனர். அதன் மீது (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை’ என்று ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள்” என்றார்கள்........புகாரி அத்தியாயம் 34, எண் 2057


நாஃபிவு அறிவித்தார். ‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
“எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) குறிப்பிடுகிறார்கள்.................. புகாரி ;943

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் ‘நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. தாம் செய்யாததைச் செய்ததாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விளைவு இருந்தது. ஒரு நாள் அவர்கள் (அல்லாஹ்விடம்) பிரார்த்தனை செய்தார்கள். மீண்டும் பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், ‘நான் விளக்கம் கேட்ட விஷயத்தில் இறைவன் விளக்கம் தந்து விட்டான். என்னிடம் இருவர் வந்து, ஒருவர் தலைமாட்டிலும் மற்றவர் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். ‘இவருக்கு என்ன நேர்ந்துள்ளது?’ என்று ஒருவர் கேட்டார். ‘சூனியம் செய்யப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘சூனியம் செய்தவன் யார்?’ என ஒருவர் கேட்க, ‘லபீத் பின் அல்அஃஸம்’ என மற்றவர் விடையளித்தார். ‘எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது’ என ஒருவர் கேட்க, ‘சீப்பு உதிர்ந்த தலைமுடி, ஆண் பேரீச்சை மரத்தின் பாளை ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ளது’ என்று மற்றவர் கூறினார். ‘எந்த இடத்தில்?’ என்று ஒருவர் கேட்க, ‘தர்வான் எனும் கிணற்றுக்குள்’ என்று மற்றவர் கூறினார்’ என்று கூறினார்கள். பின்னர் அங்கே புறப்பட்டுச் சென்று பின்னர் திரும்பி வந்தனர். அங்குள்ள பேரீச்சை மரங்களின் மேற்பகுதி ஷைத்தானின் தலையைப் போல் இருப்பதாகவும் கூறினார்கள். ‘அதை வெளியேற்றி விட்டீர்களா?’ என்று நான் கேட்டேன். ‘இல்லை, அல்லாஹ் எனக்கு நிவாரணம் தந்து விட்டான். மக்கள் மத்தியில் தீமைகள் பரவுவதை நான் அஞ்சுகிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்கள். (நூற்கள்: புகாரி – 3268, முஸ்லிம் – 2189, வேறுசில மாற்றங்களுடன் புகாரி – 5763, 5765, 5766, 6063, 6391 ஆகிய எண்களில் இடம் பெற்றுள்ளது) 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்” என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!” என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்...புகாரி ;அத்தியாயம் 34, எண் 2067

நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தனர்..........புகாரி : அத்தியாயம் 22, எண் 1230

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தர்மம் செய்யுங்கள்! ஏனெனில் உங்களிடையே ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவன் தன்னுடைய தர்மப் பொருளை எடுத்துக் கொண்டு அலைவான். அப்போது ஒருவன், நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.” ஹாரிஸா இப்னு வஹ்ப்(ரலி) அறிவித்தார்....புகாரி அத்தியாயம் 24, எண் 1424

 யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் பின் அப்துல் முத்தலீப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்......முஸ்லிம் ;ஹதீஸ் எண் : 25

.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் கொடி ஒன்று உண்டு. அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படுவான் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.....புகாரி : அத்தியாயம் 90, எண் 6966

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். ‘இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்” என்று கூறினார்கள்...புகாரி :அத்தியாயம் 45, எண் 2431

உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.......புகாரி :அத்தியாயம் 2, எண் 42

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் ‘இவர் உங்கள் (வருங்கால) மனைவி” என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) ‘இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்” என்று சொல்லிக்கொண்டேன்..........புகாரி:அத்தியாயம் 67, எண் 5078

 ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ குறித்துக் கேட்கப்பட்டது. அது தேனால் தயாரிக்கப்படும் மதுவாகும். யமன் வாசிகள் அதை அருந்தி வந்தார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘போதை தரும் (மது)பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதேயாகும்’ என்று கூறினார்கள்.,,,,,,,,,,,,,,,,புகாரி :அத்தியாயம் 74, எண் 5586

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்...புகாரி ; அத்தியாயம் 43, எண் 2400

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.................புகாரி :அத்தியாயம் 53, எண் 2697

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம். ...............புகாரி :அத்தியாயம் 17, எண் 1079

 ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான் ‘இறைத்தூதர் அவர்களே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரை சிலர் பார்ப்பார்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்’ என்று கூறினார்கள்..........புகாரி;அத்தியாயம் 83, எண் 6527

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார். அவரின் உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம் (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரின் மூளை கொதிக்கும். என நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்...........................புகாரி: அத்தியாயம் 83, எண் 6562

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கிறான் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.......புகாரி ; அத்தியாயம் 97, எண் 7378

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!” என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்......புகாரி ;அத்தியாயம் 8, எண் 444

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.........அவை 1..ஸலாமுக்குபதிலுரைப்பது, 2...நோயாளியைவிசாரிப்பது, 3...ஜனாஸாவப் பின்தொடர்வது 4....விருந்தழைப்பைஏற்றுக்கொள்வது. 5....தும்முபவருக்கு மறுமொழி கூறுவது...... ஆகியவையாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். .....புகாரி : அத்தியாயம் 23, எண் 1240

நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள் ...உளுவில் சரியாக கழுவப்படாத குதிகால்களுக்கு நரகம்தான் ,,,,, என்று கூறினார்கள்'..... அறிவிப்பவர் ; அபூ ஹுரைரா(ரலி புகாரி;165

. (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.....3 ;31



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேய மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன 
"அறிக!
அல்லாவைத் தவிர 
அனைத்துப் பொருட்களுமே 
அழியக்கூடியைவேய''
எனும் சொல்தான் 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.......... முஸ்லிம் ;4541

சாபிடுவதால் உழு நீங்குமா? நபி[ஸல்] அவர்கள் ஒரு ஆட்டின் தொடை பகுதியை சாப்பிட்டார்கள் பின்பு உழு செய்யாமல் தொழுதார்கள் ....... அறிவிப்பாளர் ;இப்னு அப்பாஸ் [ரலி]அவர்கள். அபூதாவுத்187

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்...புகாரி 651


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.
இதை உஸ்மான்(ரலி) அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார்....புகாரி;5027

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் ஓர் அடியாரின் குறையை இவ்வுலகில் மறைத்துவிட்டால், அதை அவன்
மறுமை நாளிலும் மறைக்காமல் இருப்பதில்லை 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;;;;முஸ்லிம் 5049

ஒருவர் தொழுது கொண்டு இருக்கும் போது காற்று பிரிவை உணர்வது பற்றி கேக்கப்பட்டது .....அதற்க்கு நபி[ஸல்] கூறினார்கள் காற்று பிரிவின் சப்த்தத்தையும் அல்லது அதன் நாற்றத்தையும் உணரும் வரை தொழுகையை முறிக்க வேண்டாம் ..அபூதாவுத் . பாடம் 68 ..எண் 176

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்....புகாரி ; அத்தியாயம் 30, எண் 1896

 சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்....புகாரி;2679......................