Thursday 14 April 2016

என் பார்வையில் தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி

1]எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து மது ஒழிப்பிற்காக.போராட்டம் விவசாய மக்களுக்காக போராட்டம் .தமிழ் மக்களுக்காக போராட்டம் என்று இன்னும் எத்துணையோ விசியங்களுக்காக  குரல் கொடுத்து கொண்டு இருக்கின்றவர் வயது எழுபதை தாண்டி விட்டது .- வைகோ

2]உடல் நிலை சரியில்லை தொண்டை மற்றும் முதுகில்  ஆபரேசன் செய்து இருப்பதால் பேச்சிலும் நடையிலும் தள்ளாட்டம் தவிர .மதுவினால்  ஏற்பட்ட தள்ளாட்டம் கிடையாது இவரின் பேச்சை கிண்டல் செய்யும் மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும் இவரின் பேச்சால் எத்துணையோ படங்கள் வெள்ளிவிழா கண்டவை .ரமணா திரைப்படத்தில் க்ளைமேக்ஸ்  காட்சியில் மாணவர்களை பார்த்து இவர் மூச்சுவிடாமல் பேசும் காட்சியை ரசிக்காதவர்களே இல்லை இன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பேச்சில் தடுமாற்றம்  150-க்கும் மேற்பட்ட  படங்களில்   நடித்து இருக்கிறார் டூப் போடாமல் எத்துணையோ சண்டை காட்சிகளை அசால்ட்டாக செய்தவர் . சண்டை காட்சிகளுக்கு பெயர் போனவர் திரையுலகில்  நிறைய நலிந்த கலைஞர்களை தூக்கி விட்டவர் - விஜயகாந்த் 

3]இருளில் இருக்கும் தலித் மக்களின்வாழ்வில் வெளிச்சம் கொண்டு வர உழைப்பவர்.. நூறு பேர் இருக்கும் இடத்தில் இவர் பெயர் கூறினால் அதில் ஐம்பது பேர் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள் . அரசியலிலும் சரி மக்களிலும் சரி இவருகென்று தனி மரியாதை இருக்கிறது -திருமாவளவன் 


4]முதலாளித்துவத்தை எதிர்க்கும் - கம்யூனிஸ்டுகள் 


இந்த கூட்டணிக்கு ஏன் நாம் ஒரு வாய்ப்பை குடுக்க கூடாது ...
தேமுதிக+மக்கள் நலக் கூட்டணி



சிந்திப்பீர் செயல்படுவீர் 
நன்றி  உங்கள் நண்பன் ரினாஸ்