Wednesday 27 February 2013

இஸ்லாத்தில் ஐந்தில் ஒன்று <><><><>







இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றில் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.


1. கலிமா (ஈமான்) 
- இதில் மட்டும் தான் ஒற்றுமை 

2. தொழுகை 
- விரலை ஆட்டலாமா, கூடாதா?
- தொப்பி போடலாமா, போடா கூடாதா?
- நெஞ்சில் கட்டுவதா? வயிற்றில் கட்டுவதா?
- ஆமீன் சத்தமா சொல்லலாமா?

3. நோன்பு 
- சவூதி பிறையா?
- ஊர் பிறையா?
- சர்வதேசப் பிறையா?

4. ஜகாத் 
- ஒரு பொருளுக்கு வாழ்க்கையில் ஒரு முறையா?
- அல்லது வருடத்திற்கு ஒரு முறையா?

5. ஹஜ் 
- இங்கும் அதே பிறை பிரச்சனை தான்.

சில விஷயங்கள் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின்  கலந்து ஆலோசித்த பிறகு  மக்களிடம் முறையான சட்ட விளக்கங்களாக வெளிவர வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு ஆளுக்கொரு பத்வா  என்று மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதெற்கெல்லாம் சமுதாயத்தலைவர்கள் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மறுத்துவிட முடியாது.

இஸ்லாத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, சிறு, சிறு ஷரியக்களில் நுழைந்து இப்போது அரசியல் சாக்கடையில் இஸ்லாமிய போர்வையில் நுழைந்திருக்கிறோம். கேவலமான அரசியல்வாதிகளை ஆதரிக்க ஹதீஸ்களை ஆதாரமாக காட்டும் பாணியை நானே நேரில் பார்த்து கொதித்து போயிருக்கிறேன். எங்கு தான் சென்றுகொண்டிருக்கிறோம்?

சகோதர மதத்தவர்களிடமே (வேதம் கொடுக்கப்பட்டவர்கள்) உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான கருத்தின் பக்கம் வாருங்கள் என இஸ்லாம் அழைப்பு கொடுக்கும் போது, நமக்குள் ஏனிந்த பேதம், இயக்க வெறி, ஒற்றுமையற்ற தன்மை? நாமும் பொதுவான கருத்தின் பக்கம் கவனம் செலுத்தி சிறு சிறு விஷயங்களுக்காக நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் நிலைமை மாறும்காலம் எப்போது வரும்? ஒரு சகோதரனை, மனம் வருந்தும் படியாக நடத்துவது அல்லது பேசுவதை அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்கிற ஹதீஸை நான் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அந்த ஹதீஸின் நடைமுரைபடித்தான் இயக்கவாதிகள் வாழ்கிரோமா? சிந்திப்பது நம்முடய கடமையாக இருக்கிறது. 

இதற்கும் என்ன விதமான பதில்கள் வரும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். பெருமானாரின் (ஸல்) வாக்கிற்கிணங்க நாம் கடல் நுரைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.............
                                                       

                                                             நன்றி சகோ ..Habeebulla
                                                               


நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று  கூறியுள்ளார்கள்  ...
இந்த பிரிவுகள் பிரிந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும்  நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள் ....


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் 

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலம்) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள். ....(புகாரி :ஹதீஸ்:3606 ,7084 )  

இதன் மூலமாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெருஞ்சு இருக்கும் என்று நம்புகிறேன் 
நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<




Thursday 14 February 2013

குழந்தைகள் கண்ணாடி மாதிரி .<><><><><>




         
 இந்த புகைப்படத்தில் இருக்கும் குழ்நதை நான் தான் ஆறு மாத குழந்தையாக  இருக்கும் பொழுது எடுத்தது 
                                                 

நம் வீட்டில் நம் அப்பா அம்மா போடும் சண்டைகளை நாம் நம் நண்பர்களிடம் கூறுவோமா ? இல்லை 
ஏன் என்றால் அதை நாம் அவமானமாக நினைப்போம் .மற்றும் நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இன்ன இன்ன விசயங்களை  வெளியுலகில் சொல்ல கூடாது என்று நமக்கு தெரியும் அதில் அப்பா அம்மா சண்டைகளும் கூட 
ஆனால் குழந்தைகளுக்கு அது தெரியுமா இல்லை ? 

ஏன் என்றால் குழந்தைகளின் பார்வையில் எல்லாமே விளையாட்டு பொருளாகத்தான் தெரியும் குழந்தைகள் கண்ணாடி மாதிரி ..அவர்களிடம் நல்லதை காட்டினால் தெரிவது நல்லதாகத்தான் தெரியும் அவர்களிடம் கெட்டதை காட்டினால் தெரிவது கெட்டத்தாகத்தான்..தெரியும் .....


இப்படி இருக்கும் பொழுது .சன் தொலைக்காட்சியில் ...இமான் அண்ணாச்சி நடத்தும் குட்டீஸ் சுட்டீஸ் ..என்ற நிகழ்ச்சி குழந்தைகளை வைத்து நடத்துவது. அதில் வரும் குழந்தைகளில் இமான் அண்ணாச்சி ..உங்கள் வீட்டில் அப்பா அம்மா சண்டை போடுவார்களா என்று குழந்தைகளிடம் கேலியாக கேக்கிறார் ..குழந்தைகளும் ..அப்பா அம்மாவை  பெல்ட்டால் அடிப்பதையும்..அம்மாக்கு  உதவியாகா அப்பா துணி துவைப்பதையும்  கழுத்தை நெரித்து சண்டை போடுவதையும் ...அந்த குழந்தைகள் வெகுளித்தனமாக..கூறுவதை அனைவரும் சிரித்து ரசித்து அந்த நிகழ்சிகளை பார்கின்றனர் ......

நானும் விழுந்து விழுந்து அதை சிரித்து ரசித்து பார்த்தேன் ஏன் என்றால் நம் வீட்டில் தான் இந்த மாறி நடக்குதுன்னு நினைத்தேன் ஆனால் எல்லோர் வீட்டிலும் இப்படித்தானா ..ஹி ஹி ஹி ஹி ..ஒரே சந்தோசம் .........உங்கள் வீட்டில் ?????

பெற்றோர்களே சண்ட போடுங்க தப்பு இல்ல குழந்தைகள் முன்னாடி சண்ட போடாதிங்க அது குழந்தைகளின் மனதை ரொம்ப பாதிச்சுரும் .இதை நான் சொல்லித்தான் தெருஞ்சுக்கனும்னு இல்லை உங்களுக்கே அது புரியும் .....

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே 
அவர் நல்லவராவதும் தீயவராவதும் .அன்னை வளர்ப்பினிலே 

இது ஏதோ  பாடலில்  வரும் வரிதான் அப்படின்னு நீங்க நினைக்கிரிங்க ..இது உண்மைதான்  ஆனால் இதில் உள்ள தத்துவமும்  100/100  உண்மை 

குழந்தை வளர்ப்பு பற்றி 
நபி[ஸல்] அவர்களும் தெளிவாக கூறுகிறார் 


இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (ஆதாரம் புகாரி 1385)

இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.............

 நான் பார்த்து ரசித்த குட்டீஸ் சுட்டீஸ் வீடியோ கீழே பகிர்ந்துள்ளேன் அனைவரும் பார்த்து ரசியுங்கள் .....நன்றி நட்புடன் உங்கள் >>>>ரினாஸ்<<<<





Tuesday 12 February 2013

காலம் மாறும் பொழுது விளம்பரமும் மாறுது <><>






விளம்பரம் விளம்பரம் விளம்பரம் ..............விளம்பரம் இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும் பிறப்பு இறப்பு அனைத்துக்கும் விளம்பரம் தேவை படுகிறது .....விளம்பரத்துக்கு  மனிதனின் வாழ்கையில் முக்கிய பங்குண்டு ...........தான் உற்பத்தி பண்ணு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பரம் தேவைப்படுகிறது 

ஒரு உற்பத்தியாளர் தான் உற்பத்தி பண்ணுன பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் தேவை படுகிறது ...உற்பத்தி பண்ணும் பொருளை  விட. விளம்பரத்துக்கு  அதிகம் செலவு பண்ணுகிறார்கள் உற்பத்தியாளர்கள் ....

[உதாரணத்துக்கு] பெப்சி நிறுவனம் குறைந்த செலவில்   ஒரு சிறிய பாட்டில் பெப்சி  தயாரிக்கிறார்கள்....அந்த பெப்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலமான நடிகர் நடிகைகளை கொண்டு அந்த பெப்சி பாட்டிலை விளம்பரம் செய்கிறார்கள் ..இதற்காக அந்த பெப்சி நிறுவனம் ..அந்த நடிகர் நடிகைகளுக்கு கோடி கோடியாக பணத்தை தருகிறார்கள்..
பின்பு பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப ..ஒரு பெரிய தொகை வழங்கப்படுகிறது அதுவும் பிரபலமான சில ப்ரோக்ராம்களுக்கு[program] நடுவே இந்த  விளம்பரத்தை ஒளிபரப்ப அதுக்கு ஒரு பெரிய தொகை ....

மற்றும் சில பத்திரிக்கைகளில் இந்த பெப்சி பற்றி விளம்பரம் படுத்த அதுக்கு ஒரு தொகை ..முதல் பக்கத்தில் போட்டால் அதுக்கு ஒரு தொகை....ரேடியோவில் பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச ஒரு தொகை ..மக்கள் அதிக விரும்பும் நிகழ்சிகளின் நடுவே பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச அதுக்கு கூடுதல்  தொகை ...மற்றும் 


மக்கள் அதிக நடமாடும் இடம் ..பஸ் நிலையம் .ரயில் நிலையம்...பொருட்க்காட்சி வணிக வளாகம் .. இங்கே மக்கள் காணும் இடத்தில போஸ்டர்கள் கட்டவுட்  வைக்க அதுக்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி,மற்றும் அதுக்கும் ஒரு தொகை குடுக்க வேண்டும் இப்படிஒரு உற்பத்தி பண்ண பொருளை..விளம்பரம் செய்து மக்களிடம்..கொண்டு சேர்க்க படாதபாடு பட வேண்டி இருக்கிறது ..........

இவை.அனைத்துமே மக்களிடம்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செய்யப்படுகிறது .1658இல் இலண்டனில் வெளியான இதழில் விளம்பரம் முதன்முதலில் வெளியிடப்பட்டது.இப்படி அன்று முதல் இன்று வரை இப்படித்தான்  காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது...........

எங்க அத்தா [அப்பா] அடிகடி கூறுவார் காலம்  மாறும் பொழுது வியாபாரத்தையும் காலத்துக்கு தகுந்த மாறி மாற்றவேண்டும் .....

அந்த மாறி ஆகி போனது இன்றைய விளம்பரத்தின் நிலை ..காலம் மாறும் பொழுது காலத்துக்கு தகுந்த மாறி விளம்பரத்தையும் மாற்றி வருகிறார்கள் ...ஆம் 

மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் படாத பாடு பட்டு  செய்யப்படும் விளம்பரம் போய் .....எந்த கஷ்டமும் இல்லாமல் இலவசமாக எளிதாக மக்களே மக்களிடம் விளம்பரம் செய்யும் யுக்தியை  ....உற்பத்தியாளர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்  

இன்று மக்களே மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...ஆமாம் 

சினிமாவிலோ இல்லை ஒரு பத்திரிக்கைகளிலோ  ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்து படமோ செய்தியோ  எடுத்தால்...அந்த சமூகம் அந்த செய்தியையும் படத்தையும் எதிர்த்து போராட்டம் பண்ணுகிறார்கள் .இந்த போராட்டம் 100/100 சரியானதே ...நம்மை பற்றி அவதூறாக ஒருவன் கூறினால்..அந்த அவதூறான செய்திக்கு  நம்முடைய எதிர்ப்பை காட்டனும் ..அப்பத்தான் நாம் நேசிக்கும் சமூகத்துக்கு நாம் காட்டும் நன்றி !!!!!!

இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம் ..இதன் பேரில் மக்களே இந்த உற்பத்தியை இலவசமாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள் ..இதன் மூலம் உற்பத்தியாளருக்கு இலவசமான விளம்பரம் கிடைக்க செய்கிறது அனைத்து தரப்பு மக்களிடமும் நேரடியாக இந்த உற்பத்தி கொண்டு செல்ல படுகிறது.....உற்பத்தியாளர்கள் எதிர் பாக்காத வருவாய் இந்த இலவச விளம்பரம் மூலம் கிடைக்கிறது ............

காலம் மாறும் பொழுது விளம்பரத்தையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் உற்பத்தியாளர்கள் ...ஹி ஹி ஹி  இவர்கள் எல்லாம் நல்லா வருவார்கள்.................

இந்த உற்பத்தியாளர்கள் தெரிந்து செய்கிறார்களா ? இல்லை தெரியாமல் செய்கிறார்களா ? என்று தெரியவில்லை ..ஆனால் மக்கள் தெரிந்தோ தெரியாமலையோ இவர்களின் பொருட்களுக்கு  விளம்பரம் செய்கிறார்கள் ......................

நன்றி நட்புடன் உங்கள் >>>>>ரினாஸ்<<<<<