Sunday 3 January 2016

திக்கு வாய் குணமாக



திக்கு வாய் என்பது ஒரு வார்த்தையை கூறமுடியாமல் தட்டு  தடுமாறி அந்த வார்த்தையை கூற முடியாமல் திணறுவதே திக்கு வாய் என்று கூற படுகிறது. அல்லவா
சரி திக்கு வாயை குணபடுத்துவது எப்புடி? என்பதை பார்ப்போம்
எனக்கு திக்குவாய் இருந்தது ஆனால் இப்பொழுது நான் திக்கி திக்கி பேசுவது இல்லை எனக்கு எப்புடி திக்குவாய் குணமானது என்பதை உங்களுக்கு கூறுகிறேன் திக்குவாய் உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.........
நான் ஒரு திக்குவாய்
திக்கு வாய் போக்க மருந்துகள் என்று கூறி என் பாட்டி  தந்த சிகிச்சை
[1]  காடை கோழி  முட்டையை பச்சையாக குடிப்பது [ காசு விரையம் ஆனதுதான் மிச்சம்]
[2]  பொடி பொடி கூழாங்கற்களை  வாயில் போட்டு பேசுவது [ நேரம் வீணானது தான் மிச்சம்  ]
]3]  தனி அறையில் நியூஸ் பேப்பரை சத்தமாக வாசிப்பது [தொண்டை வலி வந்ததுதான் மிச்சம் ]
[4]  டங் கிளினர் வைத்து அடிகடி நாக்கை சுத்தம் செய்வது  [ஆனால் நாக்கு புண்ணானதுதான் மிச்சம் ]  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஆனால் எதுவுமே யூஸ் ஆகலை
இதனால் எல்லோரும் என்னை கிண்டல் அடித்தார்கள் அந்த கிண்டலே எனக்கு வெறியாக மாறியது எனக்குள் உள்ள திக்குவாய் இப்போது காணாமல் போய்விட்டது .... அது எப்புடி? தானே கேக்குறிங்க  இதோ சொல்றேன் பாருங்க

திக்கு வாய் வர காரணம் நம் ஆள் மனதில் இருக்கும் ஒரு வித பயம் தான் காரணம்..என்பதை உணர்ந்தேன் அந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் இருந்து போக்கினேன்
எனக்கு சில சில எழுத்துக்கள் உச்சரிக்க வராது
உதாரணம்: கு .பூ .து .கே
குரங்கு என்று கூற திக்குவேன் இதை மாற்ற நினைத்தேன்
குரங்கு என்ற கூற சந்தர்ப்பம்  வந்தால் ஆங்கில வார்த்தையை உபயோகம் செய்வேன் அதாவது மங்க்கி. என்று கூறி வந்தேன் ...
பஸ்சில் பயணம் செய்யும் பொழுது .. பூமார்கட்  போக டிக்கெட் கேப்பேன் ஆனால் என் வாய் திக்கும்
உடனே பூமார்கட் என்று கேட்பதற்கு பதில் ஆங்கில வார்த்தையான FLOWER மார்க்கெட் என்று மாற்றி  கேட்ப்பேன்
இந்த மாறி நமக்கு எந்தெந்த வார்த்தைகள் திக்குமோ அதை கூறுவதற்கு பதிலாக ஆங்கிலத்தையோ அல்லது வேறு ஏதாவது மொழிகளில் அந்த வார்த்தைகளை கூறி பழகினோம் என்றால் நால் பட நால் பட நமக்கு திக்குவாய் என்பதே மறந்து போகும்
எனக்கு அப்படித்தான் சரியானது
மற்றும் இறைவனிடம் அழுது துவா[பிராத்தனை] கேளுங்கள்

மூஸா நபி அவர்களுக்கு திக்கு வாய் இருந்தது. அதைப் பற்றி அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்ட போது

இறைவா என்னுடைய உள்ளத்தை விசாலமாக்கு. என்னுடைய காரியத்தை லேசாக்கிவை. எனது நாவிலுள்ள முடிச்சை நீ அவிழ்த்துவிடு. என்று சொன்னார்கள்.. திருக்குர்ஆன் 20:27

இன்ஷா அல்லாஹ் நாமும் இது போல் துவா [பிராத்தனை ]செய்து மற்றும் நமது பேச்சின் ஸ்டைலை கொஞ்சம் மாற்றுவோம் என்றால் கண்டிப்பாக திக்குவாய் என்பதே இல்லாமல்  நல்ல மாற்றத்தை காண முடியும்
                                                                               நன்றி
                                                                                           நட்புடன் உங்கள் ரினாஸ்