Thursday 20 December 2012

21/12/2012...ஹ ஹ ஹ ஹ ஹ



21/12/2012 பற்றி தெரியாத மக்களே இருக்க முடியாது..ஏன் என்றால் அப்படி .பீதியை கிளிப்பி விட்டு இருக்காங்கோ ...எந்த பத்திரிகையை பார்த்தாலும் இது பற்றிய செய்திதான் ..மாயன் இனத்தவரின் காலண்டரின் .. 21/12/2012  முடிவடைகிறது ..இந்த பஞ்சாயத்துதான் ...இப்படி உலகம் முழுவது உலகம் அழிய போகிறது என்ற பீதியை கிளப்பி விட்டு இருக்கிறது .........இதனால் நாடு முழுவது சில ...மக்கள் தங்களின் செல்வத்தை எல்லாம் துறந்து ......தியாகியாக மாறி வருகின்றார்கள் .ஹ ஹ ஹ ஹ ...இதனால் ஒவ்வொரு பத்திரிகை களிலும் ..இது போன்ற செய்திகள் அடிகடி வருகின்றது ....அதில் நான் படித்து சிரித்த ஒன்றுதான் இது 

21ம் தேதி உலகம் அழியும் என்ற தகவலால்

வங்கியில் இருந்து 1 லட்சம் எடுத்து மக்களுக்கு கொடுத்தார் வியாபாரி.....ஹ ஹ ஹ இவங்க எல்லாம் நல்லா வருவாங்கோ .........சரி யார் அந்த மாயங்கள் சாரி மாயன்கள் 


யார் அந்த மாயன்கள்?

கி.மு 2000, 3000 ஆண்டுகளுக்கு முன் தென் அமெரிக்காவில் மாயா என்ற ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். வானவியல் சாஸ்திரம், கணித சூத்திரம் மற்றும் பல கலைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்துள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.  அவர்கள் குறிப்பிட்டுள்ளபடியே சில விஷயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. அவர்கள் உருவாக்கியதுதான் இந்த மாயன் காலண்டர். இக்காலண்டர் கி.மு. 3113-ல் தொடங்கி கி.பி. 2012 டிசம்பர்  21-ம் தேதி முடிவுக்கு வருகிறது.  அக் காலண்டரில் முதல் நாள் 0, 0, 0, 0, 0 என்பதில் ஆரம்பிக்கிறது.  13, 0, 0, 0, 0 என்னும் இறுதி நாளை அடைகிறது. இதற்கு மொத்தமாக 5125 வருடங்கள் ஆகின்றன. அவர்கள் காலண்டரின் முதல் தேதியான 0, 0, 0, 0, 0 என்பது  தற்போதுள்ள நவீன நாள்காட்டியின் படி கி.மு. 3114-ஐ குறிக்கிறது. மாயன்  காலண்டரின் முடிவடையும் தேதியான 13, 0, 0, 0, 0 நாள் தற்போதுள்ள நமது நாள்காட்டியின் படி கி.பி. 2012 டிசம்பர் மாதம் 21-ம் தேதி 11:11:11  மணிக்கு முடிவடைகிறது.
மாயன்கள் தங்கள் காலண்டரை டிசம்பர் 21,2012ம் தேதியிடன் முடித்தது ஏன்? அன்றுடன் உலகம் அழிந்து விடுமா! இதுதான் இக்காலண்டரை நம்புவோர் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவதற்கு முக்கிய காரணம். மேலும் அழியாவிட்டாலும் நிச்சயம் அன்று மிகப்பெரிய ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்றும் கருதுகின்றனர்.......
இஸ்லாமிய நம்பிக்கை படி உலக அழிவை பற்றி ..குரான் ஹதீஸ் என்ன சொல்ல பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம் 
உலகம் அழியுமுன் நடக்கும் சிறிய பெரிய அறிகுறிகள். இவைகள் நடக்காமல் உலகம் அழியாது. அதனால் யாரும் கவலை பட வேண்டாம். சிறிய அறிகுறிகள் எல்லாம் ஓரளவு நடந்து விட்டன. இன்னும் ஒரு சில சிறிய அறிகுறிகள் தான் நடக்க வேண்டும். அதன் பிறகு அந்த 10 பெரிய அறிகுறிகள் நடக்க ஆரம்பிக்கும். அதுவும் இறைவனுக்கு மட்டுமே தெரியும் எப்போது நடக்கும் என்பது. 
 
Sun Rise from West சூரியன் மேற்கிலிருந்து உதயமாகும், Anti Christ தஜ்ஜால் வருவது, Jesus Christ (ஜீசஸ்) வருவது அடக்கம்.
Jesus Christ (ஜீசஸ்) ஒரு முஸ்லிம். அவர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்.
 

மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவதுயுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50
குடிசைகள் கோபுரமாகும்
இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
விபச்சாரமும்மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும்மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231
தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496
பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்துஅதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும்அரபுப் பிரதேசம் நதிகளும்சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681
காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(
இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(
ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061
நில அதிர்வுகளும்பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும்நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098
உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்
வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493
சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான்முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'
அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும்கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319
யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926
கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்
சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179
யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 7119
கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117
அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது
நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183
எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191
செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424
மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936
பைத்துல் முகத்தஸ் வெற்றி
யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. 
எனது மரணம்

2. 
பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. 
கொத்து கொத்தாக மரணம்

4. 
நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. 
அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. 
மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176
மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451
அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546
மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - 
புகை மூட்டம்

2 - 
தஜ்ஜால்

3 - (
அதிசயப்) பிராணி

4 - 
சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - 
ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - 
யஃஜுஜ்மஃஜுஜ்

7 - 
கிழக்கே ஒரு பூகம்பம்

8 - 
மேற்கே ஒரு பூகம்பம்

9 - 
அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - 
இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.
புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.

(
அல்குர்ஆன் 44:10,11)
உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்
பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி

யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை

இறுதியில் யஃஜுஜ்மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(
அல்குர்ஆன் 21:96)
ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.
(
அல்குர்ஆன் 43:61)
மூன்று பூகம்பங்கள்

(
மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம்அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்
செல்லும்அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்










20 comments:

  1. மாஷா அல்லாஹ்... அடையாளங்கள் குறித்த தகவல் அருமை... தெரியாத பல ஹதீஸ்கள் தெரிந்து கொண்டேன்... ஜஸாக்கல்லாஹ்.....நானும் இந்த 21/12 ஐ ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete
  2. Replies
    1. பாய் வாங்கோ வாங்கோ .............

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் ரினாஸ்

    அருமையான தொகுப்பு.
    ஜஸாக்கல்லாஹ் கைர்.

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் ....நன்றி தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும்............

    அருமையான பகிர்வு. ஹதீஸ் தொகுப்புகள் அனைத்தும் அருமை. தெரியாத பல ஹதீஸ்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. எளிய நடை. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் ....நன்றி தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும்............

    அருமையான பகிர்வு. ஹதீஸ் தொகுப்புகள் அனைத்தும் அருமை. தெரியாத பல ஹதீஸ்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. எளிய நடை. தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் ....நன்றி தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  6. மாயன் காலண்டரை பற்றி விரிவான தகவல் ....அருமை சகோ...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  7. வா அலைக்கும் சலாம்! நண்பரே! ஒரு ஸ்மைல் போட்டுவிட்டு இவ்வளவு விஷயங்களை தொகுத்து வழங்கி இருக்கீங்களே சபாஷ்! நண்பரே, இன்று இரவுடன் மாயன் காலண்டர் புராணம் முடிவுக்கு வந்துவிடும், மாயன்களையும் மறந்து விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹ ..உண்மைதான் சகோ ..மாயன் மாயமாகி விடுவான் ...உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்...நல்ல பதிவு..ஜஸாகல்லாஹ் சகோ..:)

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் ....நன்றி தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் சகோ

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ தம்பி...

    மாஷா அல்லாஹ் சரியான நேரத்தில் மிகச் சரியான பதிவு...

    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக தம்பி....

    உங்க வலைப்பூவிலே எனக்கு ரொம்ப பிடித்த பதிவுகளில் இனி இதுவு ஒண்ணு...

    ReplyDelete
    Replies
    1. வா அலைக்கும் அஸ்ஸலாம் ....////உங்க வலைப்பூவிலே எனக்கு ரொம்ப பிடித்த பதிவுகளில் இனி இதுவு ஒண்ணு.../////மிக்க மகிழ்ச்சி

      Delete
  10. ஸலாம் சகோ.ரினாஷ்,
    சரியான நேரத்தில் நல்லதொரு தொகுப்பு சகோ. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ..தொடர்ந்து ஆதரவு தாருங்கள் சகோ

      Delete