Wednesday 24 October 2012

ஆண்கள் படிக்க வேண்டாம் !!!


ஏன் ? நான் இதை ஆண்களை படிக்கவேண்டாம்னு சொன்னேன் ?ஒரு ஆணாக இருந்துட்டு ஏன் நான் இப்படி சொன்னேன் இதில் ஏதாவது  வில்லங்கம் இருக்கிறதா அப்படினு பார்த்த ஒன்னுமே இருக்காது .இது ஆண்களுக்கு தேவைப்படாது .அப்படி தேவைப்பட்டாலும் அந்த ஆணின் தங்கைக்கோ அல்லது அக்கா மற்ற பெண்களுக்க்காகதான் தேவைப்படும் ...சரி அப்படி பெண்களுக்கு இந்த பதிப்பில் என்னதான் இருக்குனு .நினைத்தால் .நீங்கள் நினைக்கும் அளவுக்கு ஒன்னுமே இருக்காது ...விடுதியில் படிக்கும் பெண்களுக்காக ஒரு சகோதரனாக இருந்து  ஒரு ஸ்மால்  அட்வைஸ் .அவ்வளவுதான் .அப்படியே பொறுமையா படிங்க செல்லங்களா பார்ப்போம் ....





ல்லூரிகள் திறக்கும் நேரம் இது. புதிய கல்லூரியில் காலடி வைக்கும் பெண்கள் தங்கள் கல்லூரியில் இருக்கும் விடுதிகளில் தங்கி படிப்பார்கள். சிலர் தனியார் பெண்கள் விடுதியில் தங்குவார்கள். படிக்கும் பெண்கள் மட்டுமல்ல, பணிக்கு செல்லும் பெண்களும் தமிழ் நாட்டில் உள்ள பெரிய நகரம்மான  சென்னை கோவை  வந்தால் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நாம் பணத்தை கொடுத்தும் சரியான உணவு கிடைக்காதது, மற்றும் பல தீங்கை உண்டாக்கும் விடுதிகளும் இருக்கிறது . சென்னை மற்றும் கோவைக்கு  புதிதாக வரும் இளம் பெண்கள்
எந்தெந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு விடுதிகளை தேர்வு செய்ய வேண்டும் என இதோ சில டிப்ஸ்..

* சென்னை மற்றும் கோவையில்  எப்படியும் உங்களுடைய உறவினர், நண்பர்கள் வீடு இருக்கும் ஏரியாவுக்கு அருகில் விடுதி பார்ப்பது நல்லது. விடுதியில் திடீரென மோட்டார் ரிப்பேராகி தண்ணீர் வரவில்லை என்றால் கூட அவர்கள் வீட்டுக்கு சென்று தயாராகிக் கொள்ளலாம். ஏதேனும் அவசர உதவி என்றால் அவர்களிடம் கேட்கலாம்.

* ரயில் நிலையம் அல்லது பேருந்து நிலையத்திற்கு அருகில் விடுதி இருப்பது அவசியம். வெளியூரிலிருந்து வரும் பெண்கள் பெரும்பாலும் டூ-வீலர் பயன்படுத்தாமல் இருப்பதால், அதிக தூரம் நடக்க வேண்டியதை தவிர்க்கலாம். மேலும் நேரம் தாமதமாகி விடுதிக்கு வரும் போது நிகழ வாய்ப்பிருக்கும் பிரச்னைகளையும் தவிர்க்க இது உதவும்.

* உணவைப் பொறுத்தவரை சேரும் முன் அங்கே சாப்பிட்டு பார்ப்பது நல்லது. விடுதி என்றாலே சாப்பாடு அப்படி இப்படி தான் இருக்கும் என்றாலும் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தட்டை நீட்டினால் அவர்களாக அளவு சாப்பாடு வழங்கும் விடுதிகளை தவிர்க்கலாம்.

* ரூமுக்கு தனியாக டி.வி. இருந்தால் அந்த ஹாஸ்டல் பற்றி பரிசீலித்து கொள்ளலாம். ஆரம்பத்தில் ரூமில் டி.வி. இருக்கிறதே பாட்டு, சினிமா பார்த்துக் கொள்ளலாம் என சந்தோஷமாக தான் இருக்கும். 
ஆனால் நாம் கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ சென்று அலுப்பாக  திரும்பி வரும் போது ரூமில் இருக்கும் மற்ற நபர்கள் டி.வி. யை இரவு நெடுந்நேரம் வரை அலறவிடுவது மிகவும் தொந்தரவாக இருக்கும்.

* விடுதியில் சேரும் முதல் நாளே அங்கிருக்கும் கார்டியன் உங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொள்கிறாரா.. இது உங்களை வேறு ஹாஸ்டல் போக விடாமல் மனதை மாற்றும் வித்தை. அந்த அக்கா தான் நல்லா பேசுறாங்களே, அந்த தாத்தா பாசமா லக்கேஜ்லாம் எடுத்து கொடுக்கிறாரே என்று உணர்ச்சிவசப்பட்டு அங்கேயே தங்கிவிட வேண்டாம். விடுதி சரியில்லை என்றால், கிளம்பிவிடுங்கள். உங்கள் சவுகரியமும் பாதுகாப்பும் தான் முதலில். அதற்குப் பிறகு தான் எல்லாமே.

* சாப்பாடு பிடிக்கவில்லை என்றால் கூட வெளியில் சென்று சாப்பிட்டு வரலாம். தண்ணீர் பிரச்னை என்றால் எங்கு போக முடியும்? அதனால் ஒன்றுக்கு இரண்டு முறை ஹாஸ்டலில் தங்கியிருக்கும் நபர்களிடம் கோடை காலத்திலும் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருமா எனக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

* பண விஷயத்தில் அட்வான்ஸ் வாங்கி கொள்ளும் விடுதிகள், ' நீங்கள் ஹாஸ்டலை காலி செய்வதென்றால் மூன்று மாதத்திற்கு முன்பே நிர்வாகத்திடம் சொல்ல வேண்டும், அதும் அட்வான்ஸ் தொகையை பணமாக கொடுக்க மாட்டோம் காசோலையாக தான் கொடுப்போம் ' என சொல்பவர்களை மறுபரிசீலனை செய்யுங்கள்.

* சில விடுதிகளில் செல்போன் சார்ஜ் போட பிளக் பாயின்ட் உங்கள் ரூமில் இல்லாமல் வெளியில் பொது ஹாலில் மட்டுமே பிளக் பாயின்ட் இருக்கும். மின்சாரத்தை குறைக்கும் நடவடிக்கை இது. காஸ்ட்லி மொபைல் வைத்திருக்கும் நபர்கள் போனில் சார்ஜ் ஏறும் வரை பக்கத்திலே அமர்ந்திருக்கும் சூழ்நிலை ஏற்படும்.  உங்கள் செல்போன் சார்ஜ் ஏறும்வரை நீங்களும் அங்கேயே இருக்க வேண்டி வரும். உங்கள் நேரம் விரயமாகும்.

* லேப்டாப் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், அயன்பாக்ஸ் பயன்படுத்தினால் அதற்கு தனியாக கட்டணம், வாஷிங் மெஷின் பயன்படுத்த தனியாக கட்டணம்.. என பலவித கட்டணங்கள் வசூலிக்கும் விடுதிகளும் இருக்கின்றன. முதலிலேயே எல்லாவற்றையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

* மிகவும் அவசியமான விஷயம் பாதுகாப்பு. விடுதிக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் இருந்தாலோ, அதிகப்படியான ஆண்கள் கூடும் இடங்களுக்கு அருகில் விடுதி இருந்தாலோ.. கொஞ்சம் கவனம் தேவை. அதைத் தேர்வு செய்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.

* எப்படியிருந்தாலும் எடுத்ததுமே அட்வான்ஸ், வாடகை என முதல் நாளே அனைத்து தொகையும் செட்டில் செய்துவிடாமல் பாதித் தொகை மட்டும் கொடுத்துவிட்டு, பாக்கித் தொகையை இரண்டு நாட்கள் கழித்து தருகிறேன் என சொல்லுங்கள். ஒருவேளை நீங்கள் அங்கு சென்று தங்கிய பிறகு ஹாஸ்டல் பிடிக்கவில்லை என்றால் கொடுத்த பணத்தை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும் நஷ்டம் பெரிதாக இருக்காது.

* ஹாஸ்டல் எனபது நாம் பெற்றவர்களை விட்டு தனியாக இருக்கும் இடம். மனது பல விஷயங்களுக்கு அலைபாயும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. ரூமில் உங்களுடன்  தங்கும் தோழிகளுடன் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நல்ல விஷயங்களை பின்பற்றலாமே தவிர, கெட்ட விஷயங்கள் உங்களை அண்டாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும்.

ஹாஸ்டல் வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பங்களைத் தரக்கூடிய காலம். தங்கும் இடமும், உடன் இருக்கும் மனிதர்களும் உங்கள் நோக்கத்தை திசை திருப்பவோ, தடுக்கவோ வாய்ப்பளிக்காமல், கவனமாக விடுதியைத் தேர்வு செய்து நிம்மதியாக உங்கள் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.. வாழ்த்துகள் சகோதரிகளே!.....நன்றி மீண்டும் அடுத்த பதிப்பில் சந்திக்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<<


14 comments:

  1. ஸலாம்

    நீங்க சொல்றதும் கரெக்ட் தான் ... படிக்கிற பிள்ளைக்கு தானா இப்படியான நிகழ்வுகள் தெரியும்,

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீங்க படிக்குற பிள்ளை இல்லையப்பா ..ஹ ஹ ஹ ஹ

      Delete
  2. ஒரே ஓட்டம்தான்..!
    ஒவ்வொரு நாளும் ஓட்டம்..!
    எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலே ஓட்டம்..!
    ஓய்வு ஒழிச்சல் இல்லாத இயந்திரத்தனமான ஓட்டம்..!
    எதற்காக இந்த ஓட்டம்?
    வாழ்க்கைக்காக..!
    ஆனால் இந்தக் கண்மண் தெரியாத ஓட்டத்தில் நாம் தொலைத்தது எதைத் தெரியுமா?
    வாழ்க்கையை..!
    ஒரு நிமிடம் ஓட்டத்தை நிறுத்துங்கள்..!
    நிதானமாய் மூச்சை உள்ளே இழுத்து விடுங்கள்..!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த நிதானமான கமண்டுக்கு நன்றி சகோ

      Delete
  3. அடேயப்பா! இவ்வளவு விஷயங்களை அலசி ஆராய்ந்தால்தான் நல்லதுதான்.அப்படி ஹாஸ்டல் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. தேடினால் கிடைக்கும் சகோ..நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      Delete
  4. மாஷா அல்லாஹ் நல்ல பதிவு சகோ...
    இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து இது போன்று ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள்

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லா ..துவா செயுங்கள் சகோ ....தொடர்ந்து உங்களின் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்

      Delete
  5. மிகவும் அருமையான பதிவு நண்பரே.

    உங்க ஒவ்வொரு Points ம் பயனுள்ளதாய் இருக்கு.

    "Cupboad " இருகிறதா என்பதையும் உறுதிபடுத்தி கொள்ளுதலும் அவசியம். இல்லையெனில் முக்கியமான பொருட்களை பாதுகாபாக வைப்பதில் சிக்கல் வரும்.

    எங்கு சென்றாலும் வீட்டின் அருமையை மறந்து விடாமளிறுத்தல் மிகவும் அவசியம். எந்த ஒரு சம்பவம் இருப்பினும் வீட்டிலுள்ளவர்களிடம் கலந்தாலோசிப்பது தான் நல்லது. தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவர்களின் கட்டுபாட்டில் இருக்கும்வரை நிச்சயம் பெண்கள் பாதுகாப்பில்தான் இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சகோ ....தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோ

      Delete
  6. மிகவும் பயனுள்ள அறிவுறுத்தல் நண்பா! நிச்சயம் பலபேருக்கு பயன்படும்! பகிர்வுக்கு நன்றி நண்பா!

    (உண்மையை சொல்லுங்கள்! "ஆண்கள் படிக்க வேண்டாம்"னு தலைப்பு வெச்சது ஆண்களையெல்லாம் உள்ள கொண்டுவரத்தானே?....)

    நன்றி நண்பா!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ ....

      ///(உண்மையை சொல்லுங்கள்! "ஆண்கள் படிக்க வேண்டாம்"னு தலைப்பு வெச்சது ஆண்களையெல்லாம் உள்ள கொண்டுவரத்தானே?....)/// அரசியல்ல இதெல்லாம் சாதரனம்மப்பா

      Delete
  7. ஹ்ம்ம்... நல்ல அழகாக சொல்லி இருக்கிங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ..தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சி சகோ

      Delete