Wednesday 27 February 2013

இஸ்லாத்தில் ஐந்தில் ஒன்று <><><><>







இஸ்லாமின் ஐந்து கடமைகளில் ஒன்றில் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கிறோம்.


1. கலிமா (ஈமான்) 
- இதில் மட்டும் தான் ஒற்றுமை 

2. தொழுகை 
- விரலை ஆட்டலாமா, கூடாதா?
- தொப்பி போடலாமா, போடா கூடாதா?
- நெஞ்சில் கட்டுவதா? வயிற்றில் கட்டுவதா?
- ஆமீன் சத்தமா சொல்லலாமா?

3. நோன்பு 
- சவூதி பிறையா?
- ஊர் பிறையா?
- சர்வதேசப் பிறையா?

4. ஜகாத் 
- ஒரு பொருளுக்கு வாழ்க்கையில் ஒரு முறையா?
- அல்லது வருடத்திற்கு ஒரு முறையா?

5. ஹஜ் 
- இங்கும் அதே பிறை பிரச்சனை தான்.

சில விஷயங்கள் மார்க்க அறிஞர்கள் கூட்டமைப்பின்  கலந்து ஆலோசித்த பிறகு  மக்களிடம் முறையான சட்ட விளக்கங்களாக வெளிவர வேண்டும்.  அதையெல்லாம் விட்டு விட்டு ஆளுக்கொரு பத்வா  என்று மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? இதெற்கெல்லாம் சமுதாயத்தலைவர்கள் நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை மறுத்துவிட முடியாது.

இஸ்லாத்தின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆரம்பித்து, சிறு, சிறு ஷரியக்களில் நுழைந்து இப்போது அரசியல் சாக்கடையில் இஸ்லாமிய போர்வையில் நுழைந்திருக்கிறோம். கேவலமான அரசியல்வாதிகளை ஆதரிக்க ஹதீஸ்களை ஆதாரமாக காட்டும் பாணியை நானே நேரில் பார்த்து கொதித்து போயிருக்கிறேன். எங்கு தான் சென்றுகொண்டிருக்கிறோம்?

சகோதர மதத்தவர்களிடமே (வேதம் கொடுக்கப்பட்டவர்கள்) உங்களுக்கும், எங்களுக்கும் பொதுவான கருத்தின் பக்கம் வாருங்கள் என இஸ்லாம் அழைப்பு கொடுக்கும் போது, நமக்குள் ஏனிந்த பேதம், இயக்க வெறி, ஒற்றுமையற்ற தன்மை? நாமும் பொதுவான கருத்தின் பக்கம் கவனம் செலுத்தி சிறு சிறு விஷயங்களுக்காக நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் நிலைமை மாறும்காலம் எப்போது வரும்? ஒரு சகோதரனை, மனம் வருந்தும் படியாக நடத்துவது அல்லது பேசுவதை அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்கிற ஹதீஸை நான் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அந்த ஹதீஸின் நடைமுரைபடித்தான் இயக்கவாதிகள் வாழ்கிரோமா? சிந்திப்பது நம்முடய கடமையாக இருக்கிறது. 

இதற்கும் என்ன விதமான பதில்கள் வரும் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். பெருமானாரின் (ஸல்) வாக்கிற்கிணங்க நாம் கடல் நுரைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்.............
                                                       

                                                             நன்றி சகோ ..Habeebulla
                                                               


நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று  கூறியுள்ளார்கள்  ...
இந்த பிரிவுகள் பிரிந்தால் என்ன செய்யவேண்டும் என்பதையும்  நபி(ஸல்) கூறியிருக்கிறார்கள் ....


ஹுதைஃபா இப்னு யமான்(ரலி) அறிவித்தார் 

மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நன்மையைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் நபி அவர்களிடம் தீமையைப் பற்றிக் கேட்டேன். அது என்னைத் தீண்டிவிடுமோ என்று அஞ்சிய காரணத்தால் தான் (அதைப் பற்றிக் கேட்டேன்.) நான், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் அறியாமைக் கால மாச்சரியத்திலும், தீமையிலும் மூழ்கிக் கிடந்தோம். அப்போது அல்லாஹ (இஸ்லாம் எனும்) நன்மையை எங்களிடம் கொண்டு வந்தான். இந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை (குழப்பம்) இருக்கிறதூ?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம் (இருக்கிறது)" என்று பதிலளித்தார்கள். நான், 'இந்தத் தீமைக்குப் பிறகு நன்மை ஏதும் இருக்கிறதூ?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம். ஆனால், அதில் சற்று கலங்கலான நிலை (குழப்பம்) இருக்கும். என்று பதிலளிக்க நான், 'அந்தக் கலங்கலான நிலை என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஒரு சமுதாயத்தார் என்னுடைய நேர்வழியில்லாத ஒன்றைக் கொண்டு பிறருக்கு வழி காட்டுவார்கள். அவர்களில் நன்மையையும் நீ காண்பாய்; தீமையையும் காண்பாய்" என்று பதிலளித்தார்கள். நான், 'அந்த நன்மைக்குப் பிறகு ஒரு தீமை உண்டா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், நரகத்தின் வாசல்களுக்கு (வருமாறு) அழைப்பவர்கள் சிலர் தோன்றுவார்கள். அவர்களின் அழைப்பை ஏற்பவனை நரகத்தில் அவர்கள் எறிந்து விடுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! அவர்க(ளுடைய அடையாளங்க)ளை எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அவர்கள் நம் இனத்தைச் சேர்ந்தவர்களாகவேயிருப்பார்கள்; நம் மொழிகளாலேயே பேசுவார்கள்" என்று பதிலளித்தார்கள். நான், 'நான் இந்த (மனிதர்களைச் சந்திக்கும்) நிலையை அடைந்தால் என்ன (செய்ய வேண்டுமென்று) எனக்குக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தை (கூட்டமைப்பை)யும் அவர்களின் தலைவரையும் (இறுகப்) பற்றிக் கொள்" என்று பதில் கூறினார்கள். அதற்கு நான், 'அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு தலைவரோ இல்லை (பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்... (என்ன செய்வது)?' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'அந்தப் பிரிவுகள் அனைத்தையும்விட்டு (விலம்) ஒதுங்கி விடு; ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்விப் பிடித்திருக்க நேர்ந்து, அதே நிலையில் மரணம் உன்னைத் தழுவினாலும் சரி (எந்தப் பிரிவினரோடும் சேராமல் தனித்தே இரு)" என்று பதிலளித்தார்கள். ....(புகாரி :ஹதீஸ்:3606 ,7084 )  

இதன் மூலமாக நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது அனைவருக்கும் தெருஞ்சு இருக்கும் என்று நம்புகிறேன் 
நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<




4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    நல்ல பதிவு..என்னடா யாருமே இது சம்பந்தமா எதுவும் பேசலையேனு நினைத்தேன் சொல்லிடிங்க..
    அல்கம்துலில்லாஹ்.....

    இத படிச்சும் திருந்துவாங்கன்னு நினைக்கிறிங்களா?அல்லாஹ் நாடினால் தவிர அது நடக்காது

    ReplyDelete
    Replies
    1. //இத படிச்சும் திருந்துவாங்கன்னு நினைக்கிறிங்களா?அல்லாஹ் நாடினால் தவிர அது நடக்காது//// என்னுடைய பதிலும் இதுதான் சகோ அல்லாஹ் நாடினால் தவிர அது நடக்காது... உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete
  2. //ஒரு சகோதரனை, மனம் வருந்தும் படியாக நடத்துவது அல்லது பேசுவதை அவர் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்கிற ஹதீஸை நான் கேட்டிருக்கிறேன். அப்படி இருக்க அந்த ஹதீஸின் நடைமுரைபடித்தான் இயக்கவாதிகள் வாழ்கிறோமா? சிந்திப்பது நம்முடைய கடமையாக இருக்கிறது.//

    அற்புதமான கருத்து. இது எம்மக்களுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ

      Delete