Tuesday 12 February 2013

காலம் மாறும் பொழுது விளம்பரமும் மாறுது <><>






விளம்பரம் விளம்பரம் விளம்பரம் ..............விளம்பரம் இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும் பிறப்பு இறப்பு அனைத்துக்கும் விளம்பரம் தேவை படுகிறது .....விளம்பரத்துக்கு  மனிதனின் வாழ்கையில் முக்கிய பங்குண்டு ...........தான் உற்பத்தி பண்ணு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல விளம்பரம் தேவைப்படுகிறது 

ஒரு உற்பத்தியாளர் தான் உற்பத்தி பண்ணுன பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க விளம்பரம் தேவை படுகிறது ...உற்பத்தி பண்ணும் பொருளை  விட. விளம்பரத்துக்கு  அதிகம் செலவு பண்ணுகிறார்கள் உற்பத்தியாளர்கள் ....

[உதாரணத்துக்கு] பெப்சி நிறுவனம் குறைந்த செலவில்   ஒரு சிறிய பாட்டில் பெப்சி  தயாரிக்கிறார்கள்....அந்த பெப்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பிரபலமான நடிகர் நடிகைகளை கொண்டு அந்த பெப்சி பாட்டிலை விளம்பரம் செய்கிறார்கள் ..இதற்காக அந்த பெப்சி நிறுவனம் ..அந்த நடிகர் நடிகைகளுக்கு கோடி கோடியாக பணத்தை தருகிறார்கள்..
பின்பு பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப ..ஒரு பெரிய தொகை வழங்கப்படுகிறது அதுவும் பிரபலமான சில ப்ரோக்ராம்களுக்கு[program] நடுவே இந்த  விளம்பரத்தை ஒளிபரப்ப அதுக்கு ஒரு பெரிய தொகை ....

மற்றும் சில பத்திரிக்கைகளில் இந்த பெப்சி பற்றி விளம்பரம் படுத்த அதுக்கு ஒரு தொகை ..முதல் பக்கத்தில் போட்டால் அதுக்கு ஒரு தொகை....ரேடியோவில் பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச ஒரு தொகை ..மக்கள் அதிக விரும்பும் நிகழ்சிகளின் நடுவே பெப்சி நிறுவனத்தைப்  பற்றி பேச அதுக்கு கூடுதல்  தொகை ...மற்றும் 


மக்கள் அதிக நடமாடும் இடம் ..பஸ் நிலையம் .ரயில் நிலையம்...பொருட்க்காட்சி வணிக வளாகம் .. இங்கே மக்கள் காணும் இடத்தில போஸ்டர்கள் கட்டவுட்  வைக்க அதுக்கு அரசாங்கத்திடம் உத்தரவு வாங்கி,மற்றும் அதுக்கும் ஒரு தொகை குடுக்க வேண்டும் இப்படிஒரு உற்பத்தி பண்ண பொருளை..விளம்பரம் செய்து மக்களிடம்..கொண்டு சேர்க்க படாதபாடு பட வேண்டி இருக்கிறது ..........

இவை.அனைத்துமே மக்களிடம்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செய்யப்படுகிறது .1658இல் இலண்டனில் வெளியான இதழில் விளம்பரம் முதன்முதலில் வெளியிடப்பட்டது.இப்படி அன்று முதல் இன்று வரை இப்படித்தான்  காலம் காலமாக நடந்து கொண்டு வருகிறது...........

எங்க அத்தா [அப்பா] அடிகடி கூறுவார் காலம்  மாறும் பொழுது வியாபாரத்தையும் காலத்துக்கு தகுந்த மாறி மாற்றவேண்டும் .....

அந்த மாறி ஆகி போனது இன்றைய விளம்பரத்தின் நிலை ..காலம் மாறும் பொழுது காலத்துக்கு தகுந்த மாறி விளம்பரத்தையும் மாற்றி வருகிறார்கள் ...ஆம் 

மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் படாத பாடு பட்டு  செய்யப்படும் விளம்பரம் போய் .....எந்த கஷ்டமும் இல்லாமல் இலவசமாக எளிதாக மக்களே மக்களிடம் விளம்பரம் செய்யும் யுக்தியை  ....உற்பத்தியாளர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்  

இன்று மக்களே மக்களிடம் விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறார்கள் ...ஆமாம் 

சினிமாவிலோ இல்லை ஒரு பத்திரிக்கைகளிலோ  ஒரு சமூகத்தை தவறாக சித்தரித்து படமோ செய்தியோ  எடுத்தால்...அந்த சமூகம் அந்த செய்தியையும் படத்தையும் எதிர்த்து போராட்டம் பண்ணுகிறார்கள் .இந்த போராட்டம் 100/100 சரியானதே ...நம்மை பற்றி அவதூறாக ஒருவன் கூறினால்..அந்த அவதூறான செய்திக்கு  நம்முடைய எதிர்ப்பை காட்டனும் ..அப்பத்தான் நாம் நேசிக்கும் சமூகத்துக்கு நாம் காட்டும் நன்றி !!!!!!

இந்த போராட்டம் ஆர்ப்பாட்டம் ..இதன் பேரில் மக்களே இந்த உற்பத்தியை இலவசமாக மக்களிடம் கொண்டு செல்கிறார்கள் ..இதன் மூலம் உற்பத்தியாளருக்கு இலவசமான விளம்பரம் கிடைக்க செய்கிறது அனைத்து தரப்பு மக்களிடமும் நேரடியாக இந்த உற்பத்தி கொண்டு செல்ல படுகிறது.....உற்பத்தியாளர்கள் எதிர் பாக்காத வருவாய் இந்த இலவச விளம்பரம் மூலம் கிடைக்கிறது ............

காலம் மாறும் பொழுது விளம்பரத்தையும் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் உற்பத்தியாளர்கள் ...ஹி ஹி ஹி  இவர்கள் எல்லாம் நல்லா வருவார்கள்.................

இந்த உற்பத்தியாளர்கள் தெரிந்து செய்கிறார்களா ? இல்லை தெரியாமல் செய்கிறார்களா ? என்று தெரியவில்லை ..ஆனால் மக்கள் தெரிந்தோ தெரியாமலையோ இவர்களின் பொருட்களுக்கு  விளம்பரம் செய்கிறார்கள் ......................

நன்றி நட்புடன் உங்கள் >>>>>ரினாஸ்<<<<<



No comments:

Post a Comment