Saturday 8 April 2017

என்ம‌க‌ள்

என் மகளுக்காக சின்ன சின்ன கவிதைகள் 
படித்து பாருங்கள் நண்பர்களே !

இது 
ஒரு நடக்கும் 
பொம்மை ! 
#என்ம‌க‌ள் 

வீட்டில் சந்தனமரம்
வளர்ப்பது குற்றமாமே
பிறகெப்படி நீ...?
#என்ம‌க‌ள்

உலக அழகிப் பட்டமெல்லாம்
உனக்கெதற்கு
நீ உலகையே அழகாக்குபவள்
#என்ம‌க‌ள்! 


உன்னை பார்த்ததும் வாடியது,
சற்றுமுன் பூத்த பூ..!
#என்ம‌க‌ள் 

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக.
நீ மட்டும் எப்படி
பத்தே மாதத்தில் உருவானாய்...
#என்ம‌க‌ள் 

என் வாழ்வே நீ 
என் வாழ்வில் எல்லாமே நீ 
#என்மகள்

இரண்டே புள்ளிகள்தான்
ஆனாலும் அழகிய கவிதை
அவளது‌ கண்கள்...!
#என்மக‌ள்

அவளை
சிறைபிடிக்க
நினைத்து
நான் கைதியானேன்...!
#என்ம‌க‌ள் 

ஒத்திகை பார்க்காத
நடனம்...
அவளின்  நடை...!
#என்ம‌க‌ள்

இந்த தவ‌ழும்
பொம்மைக்கு பிடித்தது த‌வ‌ழாத‌ பொம்மைகளை...
#என்ம‌க‌ள் 


இப்போதெல்லாம் நீ தூங்குவதற்கு 
அழுவதில்லை 
உன்னை நான் தூக்குவதற்காகவே 
அழுகிறாய் 
#என்ம‌கள் 

க‌ட‌ங்காரி 100 முத்த‌மாக‌ இருந்தாலும் வாங்கி கொள்கிறாள் ஒன்றை கூட‌ திருப்பி த‌ருவ‌தில்லை...
#என்ம‌க‌ள் 

எதை எதையோ சாதித்து விடுகிறாய் உன் ஒரே ஒரு அழுகையால்!
#என்ம‌க‌ள்

க‌ர்ப்ப‌மாக‌ இருக்கும் பொழுது உன் அம்மா கடித்தது மாங்காயா, மருதாணியா
இத்தனை சிவப்பா 
#என்ம‌க‌ள் 

நீ சிரிக்கும் பொழுதெல்லாம் உன் அழ‌கு சிற‌கடித்து ப‌ற‌க்கிற‌து
#என்ம‌க‌ள் 

நன்றி !

மகள்களை பெற்ற அனைத்து அப்பாக்களுக்கும்  கவிதைகள் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன் 
                                                                           நன்றி  
உங்கள் அன்பு  
நண்பன்  ரினாஸ்  
mob no : 9944486627



2 comments:

  1. Replies
    1. உங்கள் வருகைக்கும் கருத்தும் நன்றி சகோ

      Delete