Saturday, 13 October 2012

ஒரு சின்ன கதை சொல்லணும் ...அதில் பெரிய மெசேஜ் இருக்கணும் ..........







 இன்று அறிவுரை சொல்லலான்னு நினைகிறேன் .நான் சிறு வயது பையன் தான் . ஆனால் அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் கிடையாது .இருந்தாலும் நான் பார்த்து பழகின நண்பர்களிடம் ஒரு கெட்டபழக்கம் இருக்கிறது ..அது எண்ணதுன்னா?  கோவம்தாங்க இந்த கோவத்த நான் நிறைய இடத்துல பாத்து இருக்கேன் ஒன்னுமே இருக்காது ஆனா மூக்குக்கு மேல கோவம் படுவாங்க ......கோவம் படும் இடத்துல கோவம் பட்டால் சரி ..ஒன்னுமே இருக்காது ஆனா அங்கே சண்ட ..சரி எனக்கு தெருஞ்ச ஒரு சின்ன கதையையும் .அதில் உள்ள பெரிய மெசேஜையும் ..அதன் அடிப்படையில் நம் மக்களின் வாழ்க்கை நடைமுறையையும் பார்ப்போம்  ...


ஒரு வயதானோர் மிகவும் ஏழ்மையானவர் ...அவர் தள்ளாடி கொண்டு காலில் செருப்பு கூட இல்லாமல்  நடந்து சென்று கொண்டு இருந்தார்..அப்போது தன் தேவைக்காக ஒரு வீட்டில் வெளிய இருந்து யாசகம் கேட்டு கொண்டு இருந்தார் .அப்போது அந்த வீட்டில் உள்ளவர் ஒரு மதபோதகர் அவர் வெளிய வந்து .இந்த வயதானோரை பார்கிறார்..பார்த்தவுடன் இந்த மத போதகருக்கு தெரிந்து விடுகிறது. .இவர் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார் .என்று .பார்த்தவுடன் இந்த மத போதகர் தன கையில் இருந்த சிறிது பணத்தை இவருக்காக தருகிறார் .ஆனால் இந்த வயதானோர் வாங்க மறுக்கிறார் ..இந்த மத போதகர் ஏன் நீங்க வாங்க மறுக்கீர்கள்  என்று கேட்டார் .அதற்க்கு அந்த வயதானோர் கூறினார் .நான் அந்த மரத்துக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தேன் .என்னுடைய பிஞ்சு போன பழைய செருப்பை   யாரோ திருடி சென்று விட்டார்கள் ..அதனால் என்னால் இந்த வெயிலில் நடக்க முடியவில்லை .நீங்க எனக்காக பணம் எல்லாம் தரவேண்டாம் .எனக்கு ஒரு செருப்பு மற்றும் வாங்கி தாருங்கள் அதுவே போதும் என்றார் .இதை கேட்ட அந்த மத போதகருக்கு சரியான கோவம் ..இந்த முதியவர் கிட்ட செருப்பு திருடிய அந்த நபரை  சபிக்க போனார் இந்த மத போதகர் .இதை கேட்ட அந்த முதியவர் அய்யா ! தயவு செய்து உங்களின் வாயால் அவனை சபிக்காதிர்கள் .ஏன் என்றால் நீங்க ஐந்து நேரம் தொழுகை நடத்தக்கூடிய  ஒரு மத போதகர் வேண்டாம் .அறியாமல் செய்த தவறு .என்னிடம் செருப்பை திருடிய அந்த நபருக்கு..அந்த பிஞ்சுபோன செருப்பு கூட இல்லாதது நாள்தானே அவன் அந்த செருப்பை திருடினான் என்னையும் விட அவன் வறுமையில் இருப்பதனால் தான் .திருடி இருக்கின்றான் .அதனால் அவனை விட்டு விடுங்கள்  ...அவனை சபிக்காதீர்கள் .அவனுக்காக நீங்க தொழுகும் பொழுது அவனின் வறுமை தீரவும் அவன் நல்ல மனிதனாக மாறவும் நீங்க தூவா[ப்ராத்தனை] பண்ணுங்கள் அதுவே போதும் .என்றார் .இதை கேட்ட அந்த மத போதகர்..அந்த முதியவரை கட்டி தழுவினார் ...சகோதர சகோதரிகளே கோவப்  படும் இடத்தில கோவம்  வராமல் .அந்த முதியவர் எப்படி அன்பாக நடந்து கொண்டார் .இது போல் நாம் எப்போதாவது நடந்து இருப்போமா ? இல்லை ..நின்னா கோவம் நடந்த கோவம் ...சரி நம்ம மக்களின் கோவத்தை பாக்கலாம் 




டீக்கடைல டீ வர கொஞ்சம் நேரம் ஆச்சுனா போதும் அங்க சண்ட ...பஸ்ஸுல போகும் பொழுது சில்லறை இல்லன போதும் அங்கயும்  சண்ட .. எ டி எம் லா பணம் எடுக்கும் பொழுது பணம் எடுகுறவன் கொஞ்சம் லேடாச்சுன போதும் வெளிய வெயிட் பண்றவங்க அவ்வளவுதான் .இருக்குற கெட்ட வார்தய்லயே திட்டுவாங்க அவன மனசுல ........வண்டியில  போகும் பொழுது. பஸ்ல போகும் பொழுது .ட்ரைன்ல போகும் பொழுது .அங்க இங்க இப்படி சொல்லிகொண்ட போகலாம் ..சரி யோகா பண்ணும் இடத்துல அமைதி இருக்கும் அங்க போன அங்கயும் சண்ட .யோகா க்ளாஸ்க்கு பண கட்டலன்னு விரட்டி விரட்டி அடிக்கிறானுங்க .....சரி ஆம்பளைங்க தான் இப்படினா .பொம்பளைங்க சண்ட இதுக்கு மேல இருக்கு .பொம்பளைங்களுக்கு கோவமே வராதுன்னு நினைத்தேன் ஆனால்...ஒரு சம்பவம் நடக்குற வரைக்கும். அது எதுனா தண்ணீ பிடிக்கும் பொழுது போடுவாங்க பாருங்க சண்ட ..பொறுமையா தண்ணி புடுச்ச அழகாக எல்லாருக்கும் தண்ணி கிடைக்கும் .இவங்க சண்ட போட்டுட்டு இவங்களுக்கும் தண்ணீ கிடைக்காம .இவங்க பின்னாடி இருக்குரவங்களுக்கும் தண்ணி கிடைக்காம ...கடைசில யாருமே தண்ணீ பிடிக்க மாட்டங்க .கார்பரேசன் காரன் தண்ணீய நிறுத்திடுவான்...
கோவப் பட்டாதான் ஆம்பள .ஒத்துக்குறேன் . ஆனால் கோவப் படும் இடத்துல  எவன் கோவப் படமா இருக்கானோ  .அவன் மேல எனக்கே கோவம் வரும் .....என்ன பொருத்தவரைக்கும் ...நாம் எல்லாரிடமும் அன்பாக பேசுவோம் எதுக்கு எடுத்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விளுகுறது நல்லாவா  இருக்கு. ..போகும் பொழுது என்னத்த கொண்டு போக போறோம் அன்பாக பேச பழகுவோம் நண்பர்களே !!! நம்முடைய மனச அன்பால பூட்டுங்க அதுவே போதும் நமக்குள்ள இருக்குற மிருகம் வெளிய போய்டும் ..நாம் கோவம் படும் பொழுது நமது முகத்தை நாமே கண்ணாடியில் பார்த்தால் போதும்  நமக்கு நம்மையே பிடிக்காது  ....அன்பை பற்றி  திருவள்ளுவர் அழகாக கூறியிருக்கிறார் 

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.....

    மனத்தில் அன்பு இல்லாதவருடைய வாழ்க்கை, பாலைவனத்தில் பட்டமரம் தளிர்த்தது போன்றது.....



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.

    அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பாகும்....

அன்பை பற்றி வள்ளுவர் எவ்வளவு அழகாக கூறியிருக்கிறார் பார்த்திங்களா அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் பொருத்திய வீனா போன உடம்பு ஆகும்னு சொல்றாரு ...எதுக்குப்பா கோவம் படனும் அன்பாக இருங்களே வாழ்க்கை நல்ல இருக்கும் இந்த டையலாக் நான் சொல்றது ..கோவம் வரணும் அதுவும் காரணமான கோவமாக இருக்கணும் அப்படி காரணமாக வந்த கோவம் கூட நிலைக்ககூடது ...மறந்தரனும் ..யாரவது அப்படி பண்றோமா கிடையாது...யார்மேலாவது கோவத்தோடு பேசிட்டோயமையானால் .அதை மறந்து பழையபடி இருக்க்கனும் .அப்படி யார் இருக்காங்க  அதுவும் கிடையாது .இத பற்றி நம்ம நபி[ஸல்] அழகாக கூறியிருக்கிறார் 

 ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்...புகாரி .6076



இஸ்லாத்தில் அன்பு காட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது  அனுமதி இல்லாதது..என்று நபி[ஸல்] அவர்கள் உறுதியாக கூறுகிறார்கள் .....ஆனால் நாம் எல்லார்கிட்டயும் சண்ட போடுறோம் ........நம்மை மாற்ற ஒருவர் நபரால்  தான் முடியும் அந்த நபர் நாம் தான்......
நன்றி ! நண்பர்களே என்றும் உங்கள் நட்புடன் >>>>ரினாஸ்<<<<








Thursday, 11 October 2012

என்னால் சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ..



நான் இந்த இணையத்தில்[blog ] கடைசியாக ....ஒரு பதிப்பை பகிர்ந்து இருந்தேன் .அது என்ன என்றால் . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற தலைப்பில் எல்லா நண்பர்களிடமும் பகிர்ந்து இருந்தேன் இதை படித்த நண்பர்கள் பல நபர்கள் .இந்த இணையத்தில் அவர்களால் கமன்ட் குடுக்க முடியாமல் .என்னுடைய பேஸ்புக்[facebook ] இணையத்திலும். என்னுடைய மின்னஞ்சலிலும்[email ] தொடர்பு கொண்டு . என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்! என்ற பதிப்பை பற்றி நிறைய பேசினார்கள் இந்த பதிப்பின் மூலம் நிறைய நபர்கள் .தன் குடும்பத்தை நினைத்து அழுதார்களாம் .அவர்களின் மலரும் நினைவுகள் அவர்களின் கண்முன் வந்ததாம் . தன குடும்பத்தைவிட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பாக்கும் .நபர்கள் அதிகமாக தங்களின் அப்பா அம்மா வை மிகவும் தொலைத்தவர்களாக .இருக்கிரார்கலம் ..இப்படி ஒவ்வொருவரும் தங்களின் ஆதங்கத்தை கூறினார்கள் .நான் போட்ட கடைசி பதிப்பினால்.இவர்கள் அனைவரும் மனது அளவில் பாதித்துல்லார்கள்.எனது வாழ்க்கை மிகவும் சோகமான வாழ்க்கை என்று அனைவரும் நினைத்து இருப்பார்கள் .ஆனால் அது தவறு மிகவும் காமடியான கலகலப்பு உள்ள வாழ்க்கை என்பதை .நான் என்னுடைய வாழ்கையில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இந்த நிகழ்ச்சி ஏற்க்கனவே நான் இந்த இணையத்தில் பகிர்ந்ததுதான் .நினைவூட்ட வந்துள்ளேன் . என்னால்  சங்கடபட்டவர்கள் .என்னாலயே சிரியுங்கள் ........



என் வாழ்கையில் நடந்த ஒரு சிரிப்பான நிகழ்வு இதோ உங்களுக்காக .....




நான் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய
பக்கத்து வகுப்பு என்சீசீ ல இருக்குற பொண்ணுகளை ஒரு கிராமத்துக்கு சேவை பண்ணுவதற்காக அழைத்து சென்றார்கள் அவர்களுக்கு என்னை காவலனாக அனுப்ப எங்க பள்ளி தலைமை ஆசிரியர் முடிவு பன்னுனாக ....அப்ப நானும் அந்த பொண்ணுகளும் புறப்பட்டோம்

அப்பொழுது எனக்குள்ளே என்னையும் அறியாத ஒரு இன்பம் இருக்கத்தானே செய்யும் என்னை சுற்றி பத்து பெண்கள் அப்படியே என் மனசு ரக்ககட்டி பறக்குது ....


அந்த கிராமத்துல சேவை பண்ணிமுடுச்ச பிறகு ..அந்த பெண்கள் எல்லாம் பந்தல் போட்டு அந்த பந்தளுக்குள்ள ஒய்வு எடுத்துகொண்டு இருந்தார்கள் அப்பொழுது அவர்களுக்கு காவலனாக நான் வெளிய உட்கார்ந்து கனவு கண்டு   கொண்டு இருந்தேன் .....
அப்பொழுது திடிருன்னு பெண்கள் எல்லோரும் சத்தம் போட்டு என்னை நோக்கி ஓடிவந்தார்கள் அப்படியே நான் சாக் ஆயுட்டேன் தெரியுமா அந்த பெண்கள் எல்லோரும் என்னுடைய கையே பிடுத்து ரினாஸ் என்ன காப்பாத்து ரினாஸ் என்ன காப்பதுன்னு சொன்னாங்க ....


எனக்கு ஒன்னுமே புரியல அப்படியே நான் கொஞ்சம் நேரம் மெளனமாக இருந்தேன்....திடிருன்னு அந்த பொண்ணுங்க என்ன தூக்கி கொண்டு அந்த பந்தளுக்குள்ள கொண்டு போய் போட்டார்கள் அந்த பத்துபொன்னுகளும் என்னை சுற்றி எங்களை காப்பது ரினாஷ் ..என்று கதருனார்கள் நான் அவர்களை நோக்கி என்ன ப்ராப்ளம் என்று கேட்டேன் அதற்க்கு அவர்கள் கூறினார்கள் அங்க பாரு அந்த பெட்டிக்கு அருகில் பாம்பு என்று கூறினார்கள் 


.....நான் பல்லியை பார்த்தாலே பயபுடுவேன் ..பாம்புனா சொல்லவா வேணும் ...இருந்தாலும் அந்த பொண்ணுங்க முன்னாடி பயத்த காட்ட கூடாதுன்னு நினைச்சேன் அப்படியே ஒரு ஹீரோ மாதிரி என் முகத்த அவுங்க முன்னாடி காட்டினேன்..


ஆனா நான் மனசுல மிகவும் பயந்துகொண்டு பீதி யாகி ...பேதி ஆகல அவ்வளவுதான் அப்படி பயந்தேன் .........அப்படியே ஒரு கம்பு எடுத்து அந்த பாம்பு பக்கத்துல போய் அல்லாஹு என்ன காப்பதுன்னு சொல்லி ஓங்கி ஒரு அடி குடுத்தேன் 


ஆனா பாம்பு அசையவே இல்ல நானும் அந்த பாம்பு நல்ல தூங்குதுன்னு நினச்சு மறுபடியும் ஓங்கி ஒரு அடிகுடுத்தேன் அப்பவும் அந்த பாம்பு அசையவே இல்ல மறுபடியும் அல்லாஹுனு நினச்சு ஒரு அடி குடுத்தேன் அப்பவும் பாம்பு அசையவே இல்ல ..........பின்பு தான் தெருன்சது அது ஏற்க்கனவே செத்து போன பாம்புனு ......


அது அந்த பொண்ணுகளுக்கு தெருஞ்சு போச்சு என்ன கிண்டல் பண்ணி சிருச்சாங்க எனக்கு ரொம்பவே அசிங்கமாக போச்சு ...வெளிய காட்டிக்காம அப்படியா கெத்தா வந்தேன் ஆனால் அந்த பொண்ணுக பள்ளியில் போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டாங்க எல்லாத்துக்கும் நான் அசிங்கம் பட்டது தெருஞ்சு போச்சு அப்ப இருந்து செத்த பாம்ப அடுச்சவனு சொல்ல ஆரம்புசுட்டங்க ..இது என்னுடைய வாழ்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் ஆகும் இப்ப இத நினைக்குபொழுது எனக்கு சிரிப்புதான் வருது..........................
இப்ப அனைவரும் சந்தோசமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் நன்றி அடுத்த பதிப்பில் சந்த்திப்போம் .இப்படிக்கு உங்கள் அன்பான நண்பன் >>>>ரினாஸ்<<<<


Tuesday, 9 October 2012

என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!


என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!

எனக்கு சிறுவயதில் இருந்து சளி தொந்தரவு இருந்துச்சு ...இதனாலயே நான் ஒரு வாரத்துக்கு ஒருமுறைதான் தலைக்கு குளிப்பேன் . சில சமயம் ஒருமாதம் வரைக்கும் குளிக்காமல் இருந்து இருக்கின்றேன் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது இந்த சளி அதிகமாக எனக்கு தொந்தரவு குடுக்க ஆரம்பித்தது  அது அப்படியேமுற்றி போய் ஒரு கட்டத்துல எனக்கு ஆஸ்துமா தொற்றிகொண்டது .






ஆஸ்துமா வந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்கே தெரியும் .சுவாசம் விட மிக சிரமமாக இருக்கும். தூங்குவதற்கு மிக சிரமமாக இருக்கும்..ஆனால் நான் கவலை படவில்லை என்னை விட என் தந்தைதான் கவலை பட்டார் .என் மகனுக்கு இந்த மாறி நோய வந்த்ருச்சுனு ..எல்லாம் மருத்துவமனைக்கும் கொண்டு போய் சிகிச்சை பார்த்தால் காலம் பூர மாத்திரை சாப்பிடனும் ...மாத்திர சாப்பிட்டால் தான்  உங்க பையன் நலமாக வாழ்வான் என்று மருத்துவர்கள் மேலும் மேலும் என் தந்தைக்கு கவலை ஏற்பட செய்தார்கள் ..

ஆனால் எனக்கு ஜாலியாக இருந்தது ஏன் தெரியுமா ? அப்பத்தான் பள்ளிக்கு போகாமல் வீட்டில் உட்கார்ந்து விளையாட முடியும் ....அப்படியே ஒரு நான்கு வருஷம் போச்சு என் கூட நெருங்கிய நண்பனாக மாறியது ஆஸ்துமா.எனக்கு பழகி விட்டது..இந்த நான்கு வருஷத்தில் எனக்குள்  வந்த இந்த நெருங்கிய நண்பன் ஆஸ்துமாவ என்ன விட்டு விரட்ட என் தந்தை.  எல்லா விதமான மருத்துவர்கல்கிட்டையும்  சென்று மருந்து வாங்கி கொண்டு வந்தார் .அதில்  சித்த மருத்துவம் .ஆய்ர்வேதிக் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ..சித்த மருத்துவரிடம் நானும் என் தந்தையும் சென்றோம் அவர் உங்க பையனுக்கு நான் குணம் ஆக்கி தருகின்றேன் .என்று கூறி ஒரு மருந்தை தந்தார் .இந்த மருந்தை நீங்க ஒரு மூணு மாத காலம் சாப்பிடனும் இந்த மருந்து சாப்பிடும் பொழுது இந்த மூணு மாதத்தில் .நீங்கள் மாமிசம் சாப்பிட கூடாது .வெறும் காய் கறிகளை மட்டும் சாப்பிடனும் அப்பததான் இந்த ஆஸ்துமா குணமாகும் .என்று கூறினார் இந்த மருந்துக்கு ரூபாய் 5000 ...ஆகும் என்றார் அப்பொழுது என் தந்தையிடம் பணம் இல்லை 3000 .ருபாய் மட்டுமே என் தந்தையிடம் இருந்தது .உடனே வீட்டுக்கு சென்ற அவர் எங்க அம்மா கையில் அணிந்து இருந்த தங்கம் வளையல்களை எனக்காக .வாங்கி கொண்டு அதனை வங்கியில் விற்று பணம் வாங்கி கொண்டு வந்தார் .பின்பு அந்த வைத்தியரிடம் அந்த மருந்தை வாங்கி கொண்டு வந்தார் .அந்த மூன்று மாதத்தில் எனக்காக எங்க வீட்டில் யாருமே கரி மீன் சாப்பிடுவது இல்லை .நான் கூறினேன் என் தந்தையிடம் நீங்க அனைவரும் .கரி மீன் சாப்புடுங்க எனக்காக நீங்க ஏன் சாப்பிடாமே இருக்கணும்னு கூறினேன் .அதற்க்கு என் தந்தை கூறினார் உன்னை பார்க்க வெய்த்து. எங்களுக்கு அந்த இறைச்சி முக்கியம் இல்லை .என் மகன் சாப்டாம இருக்கும் பொழுது எங்களுக்கு எதுக்கு அந்த கரி மீன் .என்று கூறினார் .எனக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது ....

மூன்று மாதமும் கழிந்தது ஆனால் என்னை விட்டு .என் நண்பன் ஆஸ்துமாவுக்கு போக மனம் இல்லை ....என் தந்தையின் முகத்தில் வாட்டம் அப்படியே நான் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதியில் இருகின்றேன் .ஒரு பக்கம் படிப்பு மறு பக்கம் என் நண்பனின் தொந்தரவு .என் நண்பனால் என்னால் படிக்க முடியவில்லை.......


ஒருநாள் என் தந்தைக்கு தொலைபேசியின் மூலம் அவர் நண்பர் அழைத்தார் ...அழைத்தவர் என்னை பற்றி பேச அழைத்தார் .இந்த மாறி மருதமலை பக்கத்தில் ஒரு இயற்கை வைத்திய சாலை இருக்கிறது , அங்கு போய் ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்தால் .உன்மகனுக்கு இருக்குற ஆஸ்த்துமா .குணம் ஆகும் என்று கூறினார் .... என் தந்தைக்கு மகிழ்ச்சி எவ்வளவோ பாத்தாச்சு இதையும் பார்ப்போம் என்றார் .

அப்படியே மருதமலை பக்கத்தில் இருக்கும் அந்த இயற்கை வைத்தியசாலைக்கு சென்றோம் ...அங்கு உள்ள மருத்துவர் என்னை பரிசோதனை செய்து பார்த்தார் . பார்த்தவர் .என் தந்தையிடம் கூறினார் ,இங்கு ஒரு வாரம் உங்களின் மகனை விட்டு செல்லுங்கள்...நாங்கள் இங்கயே தங்க வெயத்து .சில மூலிகை எல்லாம் உன்ன குடுப்போம் ..இந்த ஒரு வாரதிலயே உங்க மகனுக்கு குணம் ஆயிடும் ,என்று கூறியவர் இதற்க்கு ருபாய் 15000 ..செலவாகும் ஏன் என்றால் தங்கும் இடம் மூன்று நேரம் உணவு .இதற்க்கு எல்லாம் சேர்த்துதான் ருபாய் 15000 ..ஆகும் என்றார் .

என் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி ..என் மகனுக்கு சரியாகி விடும் என்று ..ஆனால் ஒரு பக்கம் சோகம் 15000 ..ரூபாய்க்கு எங்க போறது .வீட்டில் ஏதேனும் வளையல் செயின் ஏதாவது வெய்த்து காசு வாங்குவோம் என்றால் வீட்டில் .ஒரு கிராம் தங்கம் கூட இல்லை ...அப்படியே என் தந்தையின் முகத்தில் சோகம் ...நான் அவரின் கண்களை கண்ணீருடன் பார்த்தேன்...

பின்பு எனக்காக கடனை வாங்கி வந்தார் ..அந்த இயற்கை வெய்திய சாலையில் என்னை அழைத்து சென்றார் ..ஆனால் எனக்கோ அங்க செல்ல மணம் இல்லை ஒருவாரம் எப்படி என் தந்தையை விட்டு இருப்பது என்று .அவருக்கும் சங்கடம்தான் எப்படி ஒரு வாரம் என்னை விட்டு இருப்பது என்று ...அப்படியே எனக்காக வாங்கின அந்த ருபாய் 15000 ....அந்த மருத்துவரிடம் குடுத்து என்னை அங்கே விட்டு சென்றார் ..சோகத்துடன் நானும் என் தந்தையும் அங்கே பிரிந்தோம் ....


இயற்கை வைத்திய சாலையில் முதல் நாளில் நான் என் தந்தையிடம் தொலை பேசியின் மூலம் தொடர்பு கொண்டேன் ..நானும் என் தந்தையும் பேசின உரையாடல் 






நான் ; அத்தா[அப்பா] நல்ல இருக்கியா

என் தந்தை ; நல்லா இருக்கேன் பா நீ எப்படி இருக்க உனக்கு அந்த இடம் பிடுச்சு இருக்கா ?

நான் : ம்ம்ம் பிடுச்சு இருக்குப்பா..எனக்கு நைட்  தூக்கம் வர மாட்டிங்குதுப்பா .அதனால என்னுடைய அந்த சின்ன ரேடியோ எடுத்துட்டு வாதா[வாபா] 

என் தந்தை :  ம்ம்ம் கண்டிப்பா  வருகிறேன் இன்று இரவு நானும் உன் அம்மாவும் வரோம் .அப்படியே உன்ன பாத்துட்டு .அந்த ரேடியாவ தரேன் ஓகே 

நான் ; ஓகே தா[பா] சரி வெக்குறேன் ......



என்னை பார்பதற்கு என் தந்தையும் என் அம்மாவும் வந்தார்கள் ..வந்தவுடன் என் தந்தை என்னை கட்டி தழுவி முத்தம் இட்டார் என் அம்மாவும் கண்ணீர் விட்டார்கள் ..பையன் தனியாக இருக்கிறானே என்று அப்படி கொஞ்சம் நேரம் என்னிடம் பேசி விட்டு எனக்காக கொண்டு வந்த .ரேடியோ வ தந்தார்கள் .தந்து விட்டு என் தந்தை நான் நாளைக்கு இரவு வருகின்றேன் பார்த்து இருந்து கொள் என்று கூறி விட்டு சென்றனர் .

இரவு பத்து ஆச்சு எனக்கு தூக்கமே வரலை ...இரவு பன்னிரண்டு ஆச்சு அப்பவும் தூக்கமே எனக்கு வரல அந்த இரவு எனக்கு என்னுடைய வலது கை வலிக்க ஆரம்பித்தது ..நான் துடித்தேன் வலி தாங்க முடியாமல் ....எனக்கு எப்போதும் இந்த மாறி நடந்தது இல்லை . ஆனால் அன்று இரவு ஏதோ எனக்குள் ஒரு மாற்றம் . என்னுடைய வலது கையை அருவாளால் வெட்டினால் எப்படி இருக்குமோ அந்த மாறி மரண வேதனை என் அருகில் உறங்கி கொண்டு இருந்தவர்கள் .என்னுடைய சத்தம் தாங்க முடியாமல் எழுந்தனர் .எல்லோரும் என்னுடைய கையை அமுக்கி ஒன்னும் இல்ல தம்பி தூங்கு தூங்கு என்று கூறி என்னை சமாதானம் செய்தார்கள் .ஆனாலும் வலி விட்ட பாடு இல்லை .இரவு முழுக்க ஒரே அழுகையாக  இருந்தேன் வலி தாங்க முடியாமல் ..பொழுதும் விடிந்தது காலையில் வழக்கம் போல் எல்லோரும் அவர் அவர் வேலையை பார்த்தார்கள் ...எனக்கு ட்ரீட் மென்ட் சற்று நேரத்தில் நடக்க  இருக்கிறது ..அங்கு இருந்தவர்கள் கேட்டார்கள் .தம்பி இப்ப பரவாலய உனது கை வலி ..என்று அக்கறையாக விசாரித்தார்கள் ..சரி நமது கை வழியை பற்றி தந்தையிடம் கூறுவோமே என்று நினைத்து .என்னுடைய மொபைல் எடுத்து என் தந்தைக்கு அழைத்தேன் ..ஆனால் தந்தையின் தொலை பேசி அனைத்து வெய்க்கபட்டுள்ளது ...

எனக்கு ஒன்னுமே புரியல சரி அம்மாவோட மொபைல்க்கு  கூபிடுவோம்னு .அந்த மொபைல்க்கும் கூப்டேன் அதுவும் அனைத்து வெய்க்க பட்டது .சரி பேசாமே இருந்தேன் ..திடிரென்று பார்த்தால் என்னுடைய பெரியப்பா பையன் எங்க அண்ணன் என்னை பார்க்க இயற்கை வைத்திய சாலைக்கு வந்து இருந்தார் .புன்னகையுடன் அவரை வரவழைத்தேன்  ...வந்தவர் என்னிடம் கூறினார் .

நேற்று உங்கப்பா உன்ன பாக்க இங்க வந்துட்டு சென்ற போது ..வண்டியில் போகும் பொழுது ஒரு நாய் குறுக்க வந்துருச்சு ,அதனால தடம் புரண்டு விளுந்துட்டாறு  .பயப்படதே அம்மாக்கு ஒன்னும் ஆகலே .ஆனால் அப்பாக்கு வலது கை உடைந்து விட்டது என்றார்  ...மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்காரு ஆபேரசன் முடிந்து விட்டது .வலது கையில் கட்டு போட்டு இருக்காங்க .ஒரு நாற்பது நாளில் சரியாகி விடும்னு ..சொன்னார் ..அப்படியே என்னையையும் அறியாமல் சத்தம் மிட்டு அழுதேன் ...

அங்கே என் தந்தைக்கு வலது கையில் விபத்து ஆனால் .என் தந்தை அனுபவித்த வழியை அதே இரவு நான் அணுபவித்தேன்.... என் வாழ்கையில் மறக்கமுடியாத அந்த ஒரு நாள்!..என்று எனக்கு நினைக்கும் பொழுது. இந்த  நாள் தான் என் கண்முன் வருகிறது ..

நன்றி ! நட்புடன் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<


Sunday, 7 October 2012

உயிர் எழுத்துக்கள் மூலம் பழகுவோம ? நண்பர்களே


 உயிர் எழுத்துக்கள் மூலம் பழகுவோம ? நண்பர்களே


நான் இந்த இணையத்தில்  இருபத்தி  நான்கு பதிப்புகளை பதிந்துஉள்ளேன் இது என்னுடைய இருபத்தி ஐந்தாவது பதிப்பு  ..ஏன் நான் உங்களிடம் நான் இருபத்தி ஐந்து என்று தெளிவாக குறிப்பிட்டு கூறுகின்றேன் என்றால் உங்களுக்கு வேண்டுமென்றால் இருபத்தி ஐந்து சிறியதாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை என்னுடைய இந்த இணையத்தின் . மிக பெரிய இடத்துக்கு வந்துள்ளேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது .  இந்த இருபத்தி ஐந்து. ஐம்பது ஆகவும் . ஐம்பது நூறாகவும் தொடர உங்களின் ஆதரவும் எல்லாம் வல்ல இறைவனின் அருளும் வேண்டும்......

சரி இந்த இருபத்தி ஐந்தாவது பதிப்பில்  மக்களுக்கு  என்ன சொல்ல வரலாம்  என்று நினைத்தேன் . இதுவரைக்கும் பொதுவான .ஆன்மிகம் கலந்த பதிப்பை தங்களுடன்  பகிர்ந்து கொண்டேன். ஆனால் என்னுடைய தாய்மொழி தமிழ்  பற்றி தங்களிடம் சிறு விளக்கம் தர முன் வந்துள்ளேன்.. அப்படியே என்னுடைய இந்த இணையத்தின் பெயர் உங்களுக்கு தெரியும் வாங்க பலகாலம். சரி உயிரெழுத்துக்கள் பன்னிரண்டு அந்த பன்னிரண்டு எழுத்துகளின் மூலம் நாம் எவ்வாறு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் என்பதை பார்ப்போம் நண்பர்களே ...


  • தடைபடாமல் குரல் வளையிலிருந்து வரும் ஒலி, உயிரெழுத்து எனப்படும்.
  1. உயிரெழுத்து என்பது பெயர்ச்சொல் என்ற இலக்கண வகையினைச்சார்ந்ததாகும்.
  2. ஒரு மொழியின் முதன்மையான எழுத்துக்களை, உயிர் எழுத்துக்கள் என்கிறோம்.
  3.  ஆகிய 12எழுத்து க்களும், தமிழின்உயிரெழுத்துக்கள் ஆகும்.

             அ அன்பை பற்றி பேச 
             ஆ ஆருயிர் நண்பனாக பேச 
             இ இனிமையான முறையில் பேச 
              ஈ ஈகைப்  பற்றி பேச 
              உ உண்மையை மட்டும் பேச 
              ஊ ஊருக்காக பேச 
              எ எளிமையான முறையில் பேச 
              ஏ ஏழைகளை பற்றி பேச 
              ஐ ஐம்புலன்களைப் பற்றி பேச 
             ஒ ஒற்றுமையாக பேச 
             ஓ ஓவியத்தைப்பற்றி  பேச 
                ஔ ஔவையையும்  பற்றி பேச......... >>>>வாங்க பலகாலம்<<<<                     நண்பர்களே ! 




தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின்முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம்,தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில்ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும்  மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது...ஆகும்  

தமிழ், இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்தபிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும்.[7] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 60,000இற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. மற்ற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன.[8] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதி பண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கி. மு. 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.[9]பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம்ஆகும்..தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர்மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவற்றைத் தமிழிலிருந்து நீக்க உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி. பி. 800இற்கும் 1000இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது...

மொழிக்குடும்பம்

தமிழ், தமிழ் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளாகைக்காடிபெட்டக் குறும்பாசோலகா மற்றும் யெருகுலா என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம்:
தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.....

தமிழ் பேசப்படும் இடங்கள்...


தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம்கேரளம்ற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.
தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர்மலேசியாமொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.தென்னாப்பிரிக்காகயானாபிஜிசுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.
மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியாகனடா,ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.........நன்றி இதுவரைக்கும் போதும் இனி அடுத்த பதிப்பில் தமிழை பற்றி நிறைய  பார்ப்போம் என்றும் நட்புடன் >>>>ரினாஸ்<<<<