Saturday, 6 October 2012

பிறமொழிக்கு இணையான தமிழ்ச் சொற்கள்.......


நாம்  அன்றாடம் பேசும் மொழியும் உண்மையான தமிழ் மொழியும் உங்களுக்காக நண்பர்களே !





பிறமொழி                   தமிழ்மொழி
டிரேடர்ஸ்                      வணிகர்
ஆபத்து                               அல்லல்
ஆமோதி                              வழிமொழி
ஆரம்பம்                              தொடக்கம்
ஆரோக்கியம்                          நலம்
ஆயுள்                                வாழ்நாள்
ஆஸ்தி                               செல்வம்
இந்திரன்                              வேந்தன்
இஷ்டம்                               விருப்பம்
உத்தேசம்                       மதிப்பு
உத்தியோகம்                          அலுவல்
உபகாரம்                              நன்றி, உதவி
உற்சாகம்                       ஊக்கம்
உற்சவம்                              திருவிழா
உஷ்ணம்                       வெப்பம்
கஷ்டம்                               துன்பம்
கசாயம்                               கருக்கு
கிரீடம்                                முடி
கிருகப்பிரவேசம்                புது வீடு புகல்
சக்கரவர்த்தி                           மாவேந்தன்
சக்தி                                  ஆற்றல்
சகஜம்                                வழக்கம்
சகுனம்                                குறி
சகோதரர்                       உடன்பிறப்பு
சங்கடம்                               இடர்பாடு
சங்கீதம்                               இசை
சப்தம்                                ஓசை
சத்தியம்                               உண்மை
சந்திப்பு                               கூடல்
சந்திரன்                               நிலா
சந்தேகம்                              ஐயம்
சந்தோஷம்                     மகிழ்ச்சி
சந்நியாசி                       துறவி
சம்பந்தம்                       தொடர்பு
சம்பூரணம்                      முழுநிலா
சமாச்சாரம்                      செய்தி
சமுத்திரம்                      கடல்
சரணம்                                அடைக்கலம்
சன்மார்க்கம்                           நல்வழி
சாதம்                                 சோறு
சாதாரணம்                      பொதுவகை
சிநேகிதம்                       நட்பு
சீக்கிரம்                               சுருக்கு
சுத்தம்                                துப்புரவு
சுபாவம்                               இயல்பு
சுயமாய்                               தானாய்
சுரணை                               உணர்ச்சி
சுவாசம்                               மூச்சு
சேவை                                தொண்டு
ஞானம்                               அறிவு
ராஜா                                  அரசன்
ஆத்மா                               ஆன்மா
லசஷம்                               இலக்கம்
அஷ்டம்                              எட்டு
கோட்டி                               கோடி
நௌகு                               நாவாய்
மனஸ்                                மனது
வர்ணம்                               வண்ணம்
பர்ப்பட                               அப்பளம்
அம்பா                                அம்மை
ஆமாத்ய                              அமைச்சன்
ரங்க                                  அரங்கம்
ஹரா                                 ஆரம்
லோக                                 உலகம்
கந்தா                                 கந்தை
கால                                  காலம்
கோஷ்ட                              கோட்டம்
சங்க                                  சங்கம்
ஜட                            சடம்
ஜடா                                  சடை
சதுர்                                  சதுரம்
சர்க்கரா                               சருக்கரை
ஜீரக                                  சீரகம்
தண்ட                                தண்டம்
தாஹ                                 தாகம்
தாடிகா                                தாடி
நாகரிக                                நாகரிகம்
நாடக                                 நாடகம்
பட்டண                               பட்டணம்
பண்டித                               பண்டிதன்
பாண்ட்ய                              பாண்டியன்
பிண்ட                                பிண்டம்
மாஸ                                 மாதம்
பிளைவுட் சாப்                        பலகைக் கடை
சூமார்ட்                               காலணியகம்
ரைஸ் மண்டி                          அரிசி மண்டி
மியூசிக்கல்ஸ்                           இசையகம்
ஆயில் ஸ்டோர்                 எண்ணெய் அங்காடி
டிராவல்ஸ்                      செலுகை ஏற்பாட்டகம்
ஸ்டீல் பைப்ஸ்                  இரும்புக் குழாய்
டிரேடர்ஸ்                      வணிகரகம்
ஜுவல்லரி                      நகையகம்
பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ்        ஞெகிழித் தொழிலகம்
இன்ஜினியரிங்                   பொறியியல்
கன்ஸ்ட்ரக்‌ஷன்                  கட்டுமானம்
கெமிக்கல்ஸ்                           வேதிப் பொருள்
நாமம்                          நெடும்பட்டை
நாசி                           மூக்கு
புருசன்                         துணைவன்
வார்த்தை                       சொல்
சம்புத்தீவு                      நாவலம் பொழில்
நட்டம்                         இழப்பு
வருசம்                         ஆண்டு
சீரணம்                         செரிமானம்
திருப்தி                        பொந்திகை
தந்திரம்                        வலக்காரம்
சுத்தம்                          துப்புரவு
சத்தியம்                        உண்மை
நிசம்                           வாய்மை
வாஸ்தவம்                      மெய்மை
பசு                            கோ
பெளர்ணமி                     வெள்ளுவா
அமாவாசை                           காருவா
விதி                           நெறி
ஞாபகம்                        நினைவு
அலங்காரம்                            அணி
நியாயம்                        முறை
ஆதி                           முதல்
வயது                          அகவை
உதாரணம்                      எடுத்துக்காட்டு
தாமிரபரணி                            பொருநை
அங்கம்                               உறுப்பு
அத்தியாவசியம்                 இன்றியமையாதது
அசாத்தியம்                           கூடாமை
அதிசயம்                              வியப்பு
அதிர்ஷ்டம்                            ஆகூழ்
அந்தரங்கம்                            மறைமுகம்
அபராதம்                      தண்டம்
அபிவிருத்தி                           மேம்பாடு
அபூர்வம்                       அருமை
அர்ச்சனை                      தொழுகை, போற்றி
அர்த்தம்                              பொருள்
அவசரம்                              விரைவு
அவசியம்                             தேவை
அற்புதம்                              மருட்கை
அன்னசத்திரம்                         சோற்றுமடம்
அந்நிய                               அயல்
அனாவசியம்                          தேவையின்மை
அனுபவி                              நுகர், பட்டறி
அனுபவம்                      பட்டறிவு
அத்தா                                அத்தை
கச்ச                                  கச்சை
கசட, கசட                     கசடு
காவ்                                  காவு
கொக்கை                       கொக்கு
கக்கூசு                                கழிப்பறை
பம்பளிமாசு                            பப்பாளிப்பழம்
துட்டு                                 பணம்
திருக்கு                               தாழ்ப்பாள்
ரோந்து                               சுற்றுக்காவலர்
லாந்தர்                                விளக்கு
பீரோ                                 நெடும்பேழை
அலமாரி                              நெடும்பேழை
சாவி                                  திறவுகோல்
சன்னல்                               சாளரம், பலகணி, காலதர்
பாதிரியார்                      சமய போதகர், திருத்தந்தை
பேனா                                தூவல்
கடுதாசி                            தாள்...............
நன்றி ..அடுத்த பதிப்பும் தமிழை பற்றியாக தான் இருக்கும் ..இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிப்பில் சிந்திப்போம் என்றும் உங்கள் நண்பன் >>>>ரினாஸ்<<<<


Thursday, 4 October 2012

யாரப்பா இந்த மனுநீதிச்சோழன் ?


எல்லோருக்கும் இது தெரிந்த கதையே  இருந்தாலும் மறந்த நண்பர்களுக்கும் தெரியாத நண்பர்களுக்கும் 
அறிந்து கொள்ள ஒரு அலசல் ஆகும்..மெட்ராஸ் ஐகோர்ட் வளாகத்தில் உள்ள பல்வேறு சிலைகளில் கம்பீரமாக இருப்பது மனு நீதி சோழ சிலையாகும்...ஏன் இன்று இந்த மனுநீதி சோழன் போல ஆட்சி செய்யும் ஆட்ச்யாளர்கள் நம்நாட்டுக்கு இல்லை என்ற வருத்தத்துடன்.. உங்கள் நண்பன் நான் 
இந்த சிலை பின்னணியில் உள்ள வரலாறு பற்றி  உங்களுக்காக நினைவூட்ட வந்துள்ளேன்.....


  


 மனு நீதிச்சோழன் அல்லது மனுநீதி கண்டசோழன் என்பவன் நீதி தவறாது ஆட்சி செய்தலுக்கு உதாரணமாக கூறப்படும் ஒரு சோழ மன்னன்   ஆவான். வரலாற்றில் இவ்வாறு ஒரு மன்னன்  இருந்ததற்கான சான்று கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
எனினும் மிகப்பழமையான  மனுநீதிச்சோழன் கதை பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரிந்த கதை யாகும்.இக்கதை பள்ளிப்பாடப் புத்தங்களிலும் இடம் பெற்றுள்ளது. மனுநீதிச்சோழனது மகன் ஒரு நாள் தேரேறி ஊர் சுற்றக் கிளம்பினான்.அவனை அறியாமல் தேரின் சக்கரங்கள் ஏறி ஒரு பசுவின் கன்று இறந்து விட்டது.
இதைக்கண்ட தாய்ப்பசு மன்னன் அவை சென்று ஆராய்ச்சி மணியை முட்டி அடித்தது.  பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்ல உத்தரவிட்டான்.
மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டேன் என்று கூற மன்னனே தன் மகனை தேரேற்றிக்கொன்றான். சோழ நாட்டின் நீதி முறைக்கு எடுத்துக்காட்டாக மனுநீதிச்சோழன் பற்றிக்கண்ணகி குறிப்பிடுவதாகச் சிலப்பதிகாரத்தில் இந்த கதை வருகிறது.
இக்கதை தற்காலத்தில் முழுத் தமிழ் இனத்துக்கும் நீதி முறை சார்ந்த பெருமைக்கு அடையாளமாகப் பயன் பட்டு வருகிறது.  சோழன் நீதி தவறாதவன் என்பதால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுநீதிச்சோழன் சிலை நிறுவப்பட்டுள்ளது.........இந்த மனுநீதி சோழனை நினைக்கும் பொழுது ரொம்ப பெருமையாக இருக்கிறது ஆனால் இன்று தலைவர்களும் .மக்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வருத்தமாக இருக்கிறது மனிதர்களிலயே மிகவும் மோசமானவன் நீதி தவறுபவன் இரட்டை முகமாக நடிப்பவன் ஆவான் .. 

நம் நபி[ஸல்] அவர்களே கூறியுள்ளார்கள் மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்..  புகாரி ;  அத்தியாயம் 93, எண் 7179  

 ஒவ்வொரு மனிதனும் உண்மையாக இருக்கணும் ஆட்சி அதிகாரத்தில் 
உள்ளவர்கள் நீதி மறவாது நடக்கணும் .ஆனால் இன்று நடப்பதை பார்க்கும் பொழுது ..உங்களுக்கே தெரியும் நம் நாட்டில் என்ன நடக்குது என்று .......நன்றி நண்பர்களே !இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன் >>>ரினாஸ்<<<


Wednesday, 3 October 2012

மறந்து போன பழந்தமிழர் விளையாட்டுக்கள்.....


மறந்து போன பழந்தமிழர் விளையாட்டுக்கள்.....

உங்களுக்கு நினைவூட்ட வந்துள்ளேன் நண்பர்களே ......

தொலைகாட்சிகளும் கணிணியும் திரைப்படங்களும் நம் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் மறந்து போன சில பழந்தமிழர் விளையாட்டுகளை நினைவு கூற விரும்புகிறேன். பொதுவாக இவை நட்பு /அன்பு வலுப்பெற உதவுபவை.
1 . புனல் விளையாட்டு :
நீரில் விளையாடுவது.  சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.


2 . பந்து விளையாட்டு :
பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம்  செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.



3 . அசதியாடல் :
ஒருவரை ஒருவர்  பரிகாசம் செய்து விளையாடுவது
4 . அம்மானை
பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.



5 . ஊசல்
ஊஞ்சல் விளையாட்டு. ஆம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.




6 . கழங்கு
ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது.
 
7 . கண் புதைந்து ஆடுதல்
8 . கறங்கு
கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.
9 . குரவை
பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது




10. சிறு சோறாக்கல்
கூட்டாஞ் சோறு ஆக்கல்



11 .  சிற்றில் செய்தல்
கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்




12 . வட்டு
பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)






13 . ஏறுகோள்         ஜல்லிக்கட்டு




14 . வள்ளை
உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு
15 . சதவி
பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டு.



இப்போதெல்லாம் நாம் விளையாட கூட கணிணியை நாடுவதால் கண் கெடுவதோடு  உடலும் கெடுகிறது.  உடல் வலிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்விளையாட்டுக்களை இனியாவது ஆடத்  தொடங்கலாமா?     யோசிச்சு சொல்லுங்க அடுத்த பதிப்பில் சந்திகின்றேன்! நன்றி நட்புடன் உங்கள் அன்பு நண்பன் >>>>ரினாஸ்<<<< 



Tuesday, 2 October 2012

நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள். உங்களுக்காக


நம் உடலைப் பற்றிய வியத்தகு உண்மைகள்




குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.
  • நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.
  • நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
  • நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
    • பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.
    • நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
    • நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.
    • நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
    • நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
    • முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.
    • மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
    • ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.
    • இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.
    • மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.
    • ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.
    • நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.
    • நமது மூளை 80% நீரால்  ஆனது.
    • நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.
    • நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.
    • மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.
    • பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
    • மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.
    • மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்
    கண்கள்              31 நிமிடங்கள்

    மூளை               10 நிமிடங்கள்

    கால்கள்              4 மணி நேரம்
    தசைகள்              5 நாட்கள்
    இதயம்               சில நிமிடங்கள் ......
    நன்றி இப்படிக்கு உங்கள் நண்பன் >>>>ரினாஸ் <<<<